'அமைச்சர்களுக்கு எதிராக ஆன்லைன் சிட்டிசன் அவதூறு பரப்பியது'

'அமைச்சர்களுக்கு எதிராக ஆன்லைன் சிட்டிசன் அவதூறு பரப்பியது'

1 mins read
f8d00e2c-9d8b-44d1-b085-9dd6e317759d
-

சிங்­கப்­பூர் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஆன்­லைன் சிட்­டி­சன் இணை­யத்­த­ளத்­தின் ஆசி­ரி­யரான டெரி ஸு என்­ப­வ­ரும் அந்த இணை­யத்­த­ளத்­திற்கு கட்டுரை சமர்ப்­பித்த டேனி­யல் டி கோஸ்டா என்­ப­வ­ரும் அவதூறு பரப்­பி­னர் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டுள்­ளது. அத்­து­டன், டி கோஸ்டா கணினியைத் தவறாகப் பயன்­படுத்­திய ஒரு குற்­றச்­சாட்­டின் பேரி­லும் குற்­றம் புரிந்­துள்­ள­தாக மாவட்ட நீதி­பதி இங் பெங் ஹோங் நேற்று தீர்ப்­பளித்­துள்ளார்.

இவர்­க­ளின் தண்­ட­னைக் குறைப்பு வாதம், அதைத் தொடர்ந்து அவர்­க­ளின் தண்டனை விதிப்­புக்­காக வழக்கு விசா­ரணை டிசம்­பர் 23ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக நேற்று நீதி­பதி இங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் அமைச்­சர்­களுக்கு எதி­ராக அவ­தூறு பரப்­பும் கடி­தம் ஒன்றை திரு சிம் வீ லீ என்­ப­வ­ரின் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யி­லி­ருந்து திரு டி கோஸ்டா 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் அனுப்­பி­னார். ஆளும் மக்­கள் செயல் கட்சித் தலைமைத்­து­வத்­தின் மிக உயர்­மட்­டத்­தில் ஊழல் இருப்­ப­தாக இவர் தமது கடிதத்­தில் குறிப்­பிடப்­பட்­டி­ருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.