கட்டுமானத் தளத்தில் ஊழியர் காயம்; 70 மீட்டர் உயரத்திலிருந்து மீட்கப்பட்டார் (காணொளி)

தரையிலிருந்து 70 மீட்டர் உயரத்தில் இருந்தவாறு பாரந்தூக்கியில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊழியர் ஒருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

அதையடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (நவம்பர் 12) அவரைப் பத்திரமாக மீட்டனர்.

பீச் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து இரவு 8.45 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை இன்று சனிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவும் தீயணைப்பாளர்களும் அந்தக் கட்டுமானத் தளத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்த அந்த ஊழியரால் பாரந்தூக்கியிலிருந்து இறங்க முடியாததால், ஏணியில் ஏறி இரு தீயணைப்பாளர்கள் அவரது உதவிக்கு வந்தனர்.

அந்த ஊழியர் படுத்த நிலையில் இருந்ததை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

அவரது கால் முறிந்திருக்கலாம் எனச் சந்தேகித்த அவர்கள், காலுக்குக் கட்டுப் போட்டனர்.

பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவினர், அந்த ஊழியரை மீட்கும் பணியில் ஈடுபட்டு அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்கினர். மீட்புப் பணியில் நவீன சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

அவசர மருத்துவ வாகனத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!