தடுப்பூசி, காப்பூசி: கொரோனா ஒழிய இரட்டைக்குழல் துப்பாக்கி

தடுப்பூசி, காப்பூசி: கொரோனா ஒழிய இரட்டைக்குழல் துப்பாக்கி

4 mins read
359fba77-222a-43ac-9dc5-a7fa47e5af2e
-

கொவிட்-19 ஒழி­ய­வில்லை, தொற்றுக் குறையவில்லை, வழக்­க­நிலை திரும்­ப­வில்லை. கொரோனா கார­ண­மாக தலை­கீ­ழா­கி­விட்ட உல­கம் மறு­ப­டி­யும் பழைய நிலைக்­குத் திரும்ப ஆன அனைத்து முயற்­சி­களை­யும் எடுத்­து­வ­ரும் போதி­லும் இதில் முழுமைன வெற்றி கிட்­டுமா அல்­லது கொரோ­னா­வோ­டு­தான் இனி மானிட இனம் வாழ­வேண்­டியநிலை வருமா என்­பதும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

உல­கம் முதன்­மு­த­லாக சந்­திக்­கும் கொரோனா கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் ஒரே ஆயு­த­மாக, ஒரே வழிக இப்­போ­தைக்கு இருப்­பது தடுப்­பூ­சி­தான். அதை­விட்­டால் வேறு வழி­யில்லை. இந்த ஒரே ஓர் ஆயு­தத்­து­டன்­தான் உல­கம் கொரோ­னாவை எதிர்த்துப் போராடி வரு­கிறது.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி ஆற்­றல்­மிக்­க­தாக இருக்­கிறது என்­றா­லும் அதை­யும் தாண்டி கிருமி உரு­மாறித் தப்­பி­வி­டு­கிறது. இத­னால் கொரோனா கிரு­மி­யைத் தடுத்­தால் மட்டும் போதாது. அந்­தக் கிரு­மி­யி­டம் இருந்து நம்மை நிரந்­த­ர­மாகப் பாது­காத்­துக்­கொள்­ள­வும் தேவை கூடி­விட்­டது.

இதன் கார­ண­மா­கத்­தான் முழுமைக இரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொள்வதுடன் மட்­டும் போதாது. பூஸ்­டர் என்ற காப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

கொரோனா கிருமி தொற்­று­வ­தை­, தன்­னி­டம் இருந்து கிருமி பர­வுவதைத் தவிர்த்­து­விட வேண்டும் என்று ஒரு­வர் முடிவு செய்­தால் அதற்­கு ஒரே வழி தடுப்­பூ­சி­தான். இதுதான் இப்போதைய நிலை.

இருந்­தா­லும் எந்த ஒரு தடுப்­பூ­சி­யும் காலா­காலத்­திற்கு அதே, வீரி­யத்­து­டன், அதே எதிர்ப்பு ஆற்­றல் உந்­து­சக்­தி­யு­டன் இருக்­கும் என்­பது நிச்ச­ய­மில்லை. போகப்­போக அதன் ஆற்­றல் குறை­யும் என்­பது சாத்­தி­ய­மான ஒன்­று­தான்.

கொரோ­னா­வுக்கு எதி­ரா­கப் போடப்­படும் தடுப்­பூசி எத்­தனை காலத்­திற்கு உட­லில் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தக்­க­வைக்­கும் என்­பதைப் பல்­வேறு ஆய்வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது தடுப்பூசிக்கு மேலும் காப்­பூசி தேவைப்­ப­டு­கிறது என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இப்­போது கொவிட்-19க்கு எதி­ராக இரண்டு தவ­ணை­களில் தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது. இருமுறை தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர், முழுமைகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ரா­கத் தகுதி பெறு­கி­றார். இந்­தத் தகுதி, ஒரு­வர் இரண்­டா­வது தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்டபின் ஓராண்டு 14 நாட்­ க­ளுக்­குப் பிறகு காலா­வதிகிவி­டும் என்று அரசாங்­கம் வரை­முறை வகுத்­துள்­ளது.

தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்துவத்தை அங்­கீகரித்து, கொரோனாவுக்கு எதி­ராக இடை­விடாத போரை முழு மூச்­சாக நடத்­தி­வ­ரும் சிங்­கப்­பூர், அந்­தப் போராட்­டத்­தின் ஓர் அங்­க­மாக, தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­வர்­க­ளை­யும் போடா­த­வர்­க­ளை­யும் வேறு­பட்ட அணுகு­முறை மூலம் கைளுகிறது.

இப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில், முழு­வ­தும் தடுப்பூசி போட்­டுக்­கொண்ட ஒரு­வர் எத்­தனை நாட்­க­ளுக்கு அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள இய­லும் என்­பது மக்­க­ளின் அக்­க­றைக்கு உரிய ஒன்றாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

ஒரு­வர் முழுமைக தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வராக நடத்­தப்­படும் ஒரு நிலை குறிப்­பிட்ட காலத்­திற்­குத்­தான் செல்­லும். பிறகு அது காலா­வதி ஆகி­வி­டும் என்­றால் அது மக்­க­ளி­டத்­தில் குறிப்­பாக முழு­வ­தும் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளி­டத்­தில் பல கேள்­வி­க­ளைக் கிளப்­பி­விடும் என்­பதைத் தவிர்ப்­ப­தற்கில்லை. ஆகைல் இந்­தப் பிரச்­சினை முக்­கிய விவா­த­மாக ஆகி இருக்­கிறது.

தடுப்­பூசி எந்த அள­வுக்­குப் பாது­காப்பு அளிக்கிறது என்­பதை வெளிப்­ப­டுத்­தும் உள்­நாட்டு, வெளி­நாட்டு ஆய்­வு­களைக் காலக்­கி­ரம முறைப்­படி பரி­சீ­லித்து வரு­ம் சுகா­தார அமைச்சு, ஒரு­வர் முற்­றிலும் தடுப்­பூசி போட்டுக்கொண்­ட­வராகக் கரு­தப்­படும் கால அளவு, மேலும் தக­வல்­களும் புள்­ளி­வி­வ­ரங்­களும் கிடைக்கக்கிடைக்க மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்று தெரி­வித்­துள்­ளது.

ஆகைல், இந்­தப் பிரச்­சினை பற்றி பொது­மக்­கள் அள­வுக்கு அதி­க­மாகக் கவலைகொள்­ள­வேண்­டிய தேவை இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

அதே­வே­ளை­யில், காப்­பூ­சி­யின் முக்­கி­யத்­து­வத்­தின்­மீது அவர்­கள் தங்­கள் கவ­னத்­தைத் திருப்ப வேண்­டிய ஓர் உந்­து­த­லும் இதன்­மூ­லம் ஏற்­பட்டு இருக்­கிறது. காப்­பூசிச் செயல்­திட்­டம் சிங்­கப்­பூ­ரிலும் வெளி­நா­டு­க­ளி­லும் மும்­மு­ர­மாக சூடு­பி­டிப்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

கொரோ­னா­வுக்கு எதி­ரான வலு­வான பாதுகாப்பை அளிப்­ப­தும் அந்­தக் கிருமி கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய கடுமைன பாதிப்­பு­களைத் தவிர்த்­துக்­கொள்ள உத­வு­வ­தும் இப்­போ­தைக்கு தடுப்­பூசி ஒன்­று­தான் என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

உரு­மாறி வரும் கிரு­மி­க­ளை­யும் ஒடுக்கு­வதில் அவை விரும்பிய பல­னைத் தரு­கின்­றன.

என்­றா­லும் மற்ற தடுப்­பூ­சி­களைப் போலவே, கொரோ­னா­வுக்கு எதி­ரான தடுப்­பூசி ஆற்­ற­லும் கால­வோட்­டத்­தில் மங்­கக்­கூ­டும். இதைத்­தான் அண்மை­யில் நியூர்க் டைம்ஸ் செய்­தித்­தாள்­கூட சுட்­டிக்­காட்டி இருக்­கிறது. இப்­படி ஆற்­றல் மங்­கு­வதால் தடுப்­பூசி பலன் இல்­லா­தது என்ற முடி­வுக்கு வந்து­வி­டக்­கூ­டாது என்­பதை வல்­லு­நர்­கள் அடிக்­கடி சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

இப்போதைய தடுப்­பூசி­கள் ஆற்­றல்­மிக்­கவைக இருந்­தா­லும் அவற்­றின்­மூ­லம் உட­லில் ஏற்­ப­டக்­கூடிய நோய் எதிர்ப்பு ஆற்­றலை நீண்ட நெடுங்­கா­லத்­திற்கு நீட்­டித்து கொள்ளவேண்­டிய தேவை இருக்­கிறது. இதைத்­தான் காப்­பூ­சி­கள் செய்­கின்­றன.

இவை ஏற்­கெ­னவே உட­லில் போடப்­பட்ட தடுப்­பூ­சி­க­ளால் ஏற்­பட்டு இருக்­கும் பாது­காப்பை மேலும் பலப்­ப­டுத்தி உட­லில் கிருமி நுழைத அள­வுக்கு முழு அரணை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­ப­டி­யும் காப்­பூ­சியைப் போட்­டுக்­கொள்­ளும்­ப­டி­யும் பொது­மக்­க­ள், குறிப்­பாக முதி­யோர் திரும்­பத்திரும்ப வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­வ­தற்கு இதுவே முக்­கிய கார­ணம். முழுமைக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­கள் காப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டால் அவர்­க­ளின் உட­லில் நோய் எதிர்ப்­பாற்­றல் 10 மடங்­கிற்­கும் மேல் கூடு­கிறது.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் உல­கம் இனி வாழ வேண்­டும் என்ற சூழ்­நிலை ஏற்­படும்பட்­சத்­தில் தடுப்­பூ­சி­யும் தவிர்க்க இய­லாத ஒன்று என்ற ஒரு நிலையும் ஏற்­படும் என்­பதே உண்மை.

இதர தொற்­று­நோய்­க­ளுக்கு எதி­ராக வரு­டாந்­திர அடிப்­ப­டை­யி­லான தடுப்­பூ­சி­களை ஏற்­கெ­னவே உல­கம் பார்த்து வரு­கிறது. இது­போ­லவே கொவிட்-19க்கு எதி­ராக தடுப்­பூசி மூலம் தகுந்த பாது­காப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டியநிலை வரக்­கூ­டும் என்­ப­தை­யும் தவிர்ப்­ப­தற்­கில்லை.