சிங்கப்பூர் மாதரைச் சிறப்பிக்கும் அஞ்சல்தலை வெளியீடு

சிங்கப்பூர் மாதரைச் சிறப்பிக்கும் அஞ்சல்தலை வெளியீடு

1 mins read
c49ed73b-8ef7-4668-af46-fdaa6adf5a8d
அஞ்சல்தலையை வடிவமைத்தவர்களில் ஒருவரான காசே இங்குடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் (இடது). படம்: சுன் ஷுவெலிங்/ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூர் மாதர்­க­ளின் தொண்­டு­களை அங்கீகரித்து சிறப்பிக்கும் நினைவு அஞ்­சல்தலை நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் மாதர்­க­ளைப் போற்றி கொண்­டா­டும் ஓர் ஆண்­டாக இந்த ஆண்டை நினை­வு­கூ­றும் வகை­யில், சிங்­கப்­பூர் போஸ்ட் நிறு­வ­ன­மும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் சேர்ந்து மேற்­கொள்­ளும் முயற்­சி­யாக இந்த அஞ்­சல்தலையை சிங்­போஸ்ட் வெளி­யிட்டது.

இத­னி­டையே, இந்த அஞ்­சல் தலை பற்றி கருத்து கூறிய சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங், இந்த அஞ்­சல்தலை­யில் இடம்­பெற்று இருக்­கும் நன்­னெ­றி­க­ளின் அடிப்­படை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் இங்கு மாதர்­கள் ஆற்­றும் தொண்­டு­க­ளைத் தொடர்ந்து அங்­கீ­க­ரிப்­பார்­கள் என்று நம்பிக்கை தெரி­வித்­தார்.