இளம் தொழில்­மு­னை­வ­ரின் இனிப்­பான பரிசு

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தமது 18வது வய­தில் விரும்­பித் தொடங்­கிய தொழி­லைக் கட்­டிக்­காக்க, கிட்­டத்­தட்ட கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக போராடி வரு­கி­றார் பா. ரோசினி நாயுடு.

எனினும் தம்­மைப் பற்­றி மட்­டும் யோசிக்­கா­மல், பண்டிகைக் காலத் தில் மற்­ற­வர்களின் தீபாவளியிலும் தித்திப்பு சேர்த்தார் தற்­போது 22 வய­தி­ருக்­கும் இந்த இளை­யர்.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அனைத்­து­லக வர்த்­தகத் துறையில் பயி­லும்­போதே நண்­பர்­க­ளின் பிறந்­த­நாள் கொண்­டாட்­டங்­களை விரும்பி ஏற்­பா­டுச் செய்­து­வந்­தார் இவர். ஆர்வத்தைத் தொழி­லாக மாற்­றி­வி­ட­லாம் என்று சிந்­தித்­தார்.

பிறந்­த­நாள், ஜோடி­கள் சந்­திப்பு போன்ற நிகழ்­வு­க­ளுக்கு 'பிக்­னிக்' ஏற்­பா­டு­கள் செய்­யும் தொழி­லில் 2017ஆம் ஆண்­டில் ரோசினி இறங்­கி­னார். இவ­ரது குடும்­பத்­தில் யாருக்­கும் வர்த்­த­கம் நடத்­திய அனு­ப­வம் இல்லை.

$150 முதலீட்டில் நிறுவனம்

உயர்­கல்வி மாண­வ­ராக $150 முத­லீட்­டு­டன் 'தி மிட் யப் எஸ்ஜி' எனும் நிறுவனத்தை நண்­பர்­க­ளு­டன் தொடங்­கிய ரோசினி, இன்று ஓர் அலு­வ­ல­கத்தை வாட­கைக்கு எடுத்து ­ந­டத்­தும் அள­வுக்கு முன்னேறியுள்ளார்.

அலு­வ­லகக் கொண்­டாட்டங்களை ஏற்­பாடு செய்­வது, கண்­காட்சி உரு­வங்­களை வடி­வ­மைத்­தல், திரு­மண ஏற்­பாடு மற்­றும் படப்­பி­டிப்பு போன்ற சேவை­களை அவ­ரது நிறு­வ­னம் வழங்­கு­கிறது.

டிபி­எஸ் வங்கி, ஹில்­டன் சிங்­கப்­பூர் ஹோட்­டல், சிங்­கப்­பூர் இந்­தி­யர் வர்த்­தக, தொழில் சபை போன்ற அமைப்­பு­களும் இவ­ரது நிறு­வ­னத்தின் வாடிக்கையாளர்கள்.

ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­த­போது, வர்த்­த­கம் பாதிப்­ப­டைந்­தது.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நிதித் துறை பட்­டப்­ப­டிப்பை பகு­தி­நே­ர­மாக மேற்­கொண்டு வரும் ரோசினி, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தும் நில­வ­ரம் மேம்­படும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

இத்­த­ரு­ணத்­தில் சமூ­கத்­தி­ன­ருக்­கும் நாட்­டுக்கு பங்­க­ளிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கும் நன்றி தெரி­விக்க, தீபா­வ­ளியை முன்­னிட்டு 590 இனிப்பு வகை பொட்­ட­லங்­க­ளை­யும் 400 முறுக்­குப் பொட்­ட­லங்­க­ளை­யும் இல­வ­ச­மாக வழங்க முடிவு செய்­தார்.

தீபாவளிப் பரிசுகள் விநியோகம்

நவம்­பர் 7ஆம் தேதி அன்று, துவாஸ், தாகூர் லேன் ஆகிய பகு­தி­களில் உள்ள வா லூன், மெக்­கொ­னெல் டொவெல், சீ ஹப் செங் ஆகிய தங்­கு­வி­டு­தி­க­ளுக்­கு அவ­ரது நிறு­வ­னத்­தி­ன் ஊழி­யர்­கள் நேர­டி­யாகச் சென்று பரிசுகளை விநியோகித்தனர்.

அன்று மாலை­யில் தீபா­வ­ளிப் பல­கா­ரங்­களை கேம்­பல் லேனி­லுள்ள பொதுமக்­க­ளுக்கு ரோசி­னி­யும் அவ­ரது நிறு­வன ஊழி­யர்­களும் வழங்­கி­னர்.

கொவிட்-19 குடி­யே­றி­ய­வர் ஆத­ரவு கூட்­டணி (Covid-19 Migrant Support Coalition) எனும் தொண்­டூ­ழி­யக் குழு இவர்­க­ளது முயற்­சிக்கு ஆத­ரவு தந்­தது.

தங்­கு­விடு­தி­களை அணுகி அங்­குச் செல்ல ரோசி­னிக்கு அனு­மதி வாங்­கித் தந்­தது இக்­குழு. இத்­து­டன் குழு நிற்­க­வில்லை.

"அந்­நா­ளி­யில் 12 வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் 1,379 சைவ உணவு பெண்டோ பொட்­ட­லங்­களை வழங்க எங்­க­ளது தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­னர். வழக்­க­மாக தீபா­வளி நேரத்­தில் சிராங்­கூன் சாலைக்கு இந்­திய ஊழி­யர்­கள் செல்­வார்­கள். அங்கு உணவு உண்­ணும் திருப்­தியை அவர்­க­ளுக்கு அளிக்க முயன்­றோம்," என்­றார் கொவிட்-19 குடி­யே­றி­ய­வர் ஆத­ரவுக் கூட்­ட­ணி­யின் தொண்­டூ­ழி­ய­ரும் கப்­பல் துறை திட்ட நிர்­வா­கி­யு­மான திரு கணே‌ஷ் காசி­நாத், 43.

"இன்­னும் ஒன்றரை ஆண்­டு­களில் பட்­டப்­ப­டிப்பை முடித்­த பிறகு, முழுநேர­மாக தொழி­லில் கவ­னம் செலுத்­த­வுள்­ளேன். மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கும் இந்த முதல் முயற்­சி­யில் நல்ல ஆத­ரவு கிடைத்­தி­ருக்­கிறது. எதிர்­கா­லத்­தில் மற்ற பண்­டி­கை­க­ளி­ன்போதும் இது­போன்ற சமூ­க­நல முயற்­சி­களில் ஈடு­பட விரும்­பு­கி­றோம்," என்று கூறி­னார் வளர்ந்­து­வ­ரும் தொழில்­மு­னை­வர் ரோசினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!