நம்பிக்கை ஊட்டும் பாரதிக்கு இசை அஞ்சலி

கி. ஜனார்த்தனன்

மகா­கவி சுப்­பிர­ம­ணிய பார­தி­யார் மறைந்த 100ஆவது ஆண்டை அனு­ச­ரிக்­கும் வித­மாக சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு நடத்­தப்­பட்டு வந்த பல்­வேறு நிகழ்ச்­சி­களை நிறைவு செய்­யும் இசை நிகழ்ச்சி ஒன்று, வரும் 19ஆம், 20ஆம் தேதி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

'நிமிர்ந்த நன்­னடை' எனும் இந்­நி­கழ்ச்­சிக்கு சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைச் சங்­கத்­தின் முன்­னாள் மாண­வர்­கள் ஏற்­பாடு செய்­துள்­ள­னர். எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்­கம் ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தும் கலா உட்­ச­வத்­தின் பகு­தி­யாக நிகழ்ச்சி இடம்­பெ­று­கிறது.

பார­தி­யா­ருக்கு இசை அஞ்­ச­லி­யைச் சமர்ப்­பிக்­கும் யோசனை கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உரு­வா­ன­தாக நிகழ்ச்­சி­யின் கலை இயக்­கு­நர் வி எம் சாய் விக்­னேஷ் தெரி­வித்­தார்.

"சக இயக்­கு­ந­ரான ஷ்ரேயா கோபி தேவை­யான அடிப்­படை ஆய்­வைச் செய்­த­பின்­னர் என்னை இந்த முயற்­சி­யில் இணைத்­தார்.

"பார­தி­யா­ரின் கொள்­ளுப்­பே­ர­னும் இசை நிபு­ண­ரு­மான டாக்­டர் ராஜ்­கு­மார் பார­தியை நாங்­கள் அணு­கி­னோம். சில கவி­தை­க­ளுக்கு இசை­ய­மைக்­கும்­படி நாங்­கள் முன்­வைத்த வேண்­டு­கோளை அவர் ஏற்­றுக்­கொண்­டார்," என்று திரு விக்­னேஷ், 37, கூறி­னார்.

நிகழ்ச்­சிக்­கான பணி­கள் கடந்­தாண்டு மும்­மு­ர­மாக தொடங்­கி­ய­தாக குமாரி ஷ்ரேயா கோபி, 31, தெரி­வித்­தார்.

"தாள உத­விக்கு டி ஆர் சுந்­த­ரே­சன், மேற்­கத்­திய இசை அமைப்­புக்கு இணை பேரா­சி­ரி­யர் டோனி மெக்­க­ரோம் என பல நல்ல திற­னா­ளர்கள் இதில் கைகோர்க்க இணங்­கி­னர்," என்றார் ஷ்ரேயா.

உற்­சா­கம் தரும் பார­தி­யின் வரி­கள்

அச்­ச­மில்லை, பாப்பா பாட்டு, சென்­றது மீளாது, புது­மைப் பெண், பகை­வ­னுக்கு அருள்­வாய், தெளிவு, ஆத்ம ஜயம், அக்­கி­னிக் குஞ்­சொன்று கண்­டேன், யோக சித்தி ஆகிய பாடல்­க­ளின் பகு­தி­கள் இந்­நி­கழ்ச்­சிக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

"இக்­க­வி­தை­க­ளின் வரி­கள் மிக­வும் இயல்­பா­கவே கேட்­ப­வ­ருக்கு உற்­சா­கத்­தைத் தரக்­கூ­டி­யவை. அத­னால் தன்­னம்­பிக்கை எனும் இந்­நி­கழ்ச்­சி­யின் கருப்­பொ­ருள் இயல்­பா­கவே அமைந்­து­விட்டது," என்­றார் குமாரி ஷ்ரேயா.

பாரதியார் அர­சி­யல், சமூ­கம், என புறத்­தில் செயல்­பட்ட புரட்­சி­யா­ளர் மட்­டு­மல்ல. மனி­தர்­க­ளின் உணர்­வு­களை மேல்­நி­லைக்கு ஏற்­றும் பணி­யான அகப் புரட்­சி­யி­லும் ஈடு­பட்­டதை இவ­ரது கவி­தை­கள் தெளி­வா­கக் காட்­டு­வ­தாக இயக்குநர்கள் தெரி­வித்­த­னர்.

பார­தி­யார் கவி­தை­களை மேலும் ஆழ­மாக ரசிக்க விரும்­பு­வோர் எந்த மொழி­யைத் தெரிந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும் தயங்­கா­மல் வரும்­படி நிகழ்ச்­சி­யின் தயா­ரிப்­புக் குழு கேட்­டுக்­கொண்­டது. அதன் பொருட்டு, பார­தி­யார் கவி­தை­க­ளின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பு­கள் அடங்­கிய கையே­டு­கள் நிகழ்ச்சி பார்­வை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

நிகழ்ச்சியில் பாரம்­ப­ரிய இசை, மேற்­கத்­திய இசைக் கல­வை­யு­டன் கர்­நா­டக சங்­கீத வாய்ப்­பாட்­டும் இடம்பெறும்.

திரு விக்­னே­ஷு­டன் நிஷாந்த் தியா­க­ரா­ஜன் வாய்ப்­பாட்­டில் இணை­வர். திரு­வாட்டி சௌந்­தர்யா கல்­யான் வாய்ப்­பாட்­டு­டன் வய­லின் இசைக்­க­வி­ருக்­கி­றார்.

சுசந்தா சௌத்ரி சித்­தா­ரை­யும் இசுரு விஜய்­சோமா கித்­தா­ரை­யும் வாசிப்­பர். குமார் மோகன் கீபோர்­டை­யும் யுஜீன் டியோ பல்­வேறு தாள வாத்­தி­யங்­க­ளை­யும் வாசிப்­பர்.

பார­தி­யார் கவி­தை­க­ளைப் பலர் அறிந்­தி­ருந்­தா­லும் அதனை இசை­யு­டன் ரசிக்­கும் ஒவ்­வொரு அனு­ப­வ­மும் புது­மை­யா­னது என்­றார் நிஷாந்த் தியா­க­ரா­ஜன், 27.

"கவிதை வரி­கள் மாறாது. ஆனால் அத­னு­டன் சேரும் இசை வேறு வடி­வம் பெறும்­போது, நாம் அந்த வரிகளைப் புரிந்­து­கொள்­ளும் விதம் மாறு­ப­டு­கிறது. நிகழ்ச்­சி­யில் பாடும் நான் இதனை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

ஒலிப்­ப­டைப்­புக்கு அழகு சேர்க்­கும் வித­மாக வண்­ணப் படங்­க­ளை­யும் ஒளி வடி­வங்­க­ளையும் நிகழ்ச்­சி­யின்­போது காண்­பிக்­க­வுள்­ளார் 30 வயது மெர்­வின் வோங்.

"முப்­ப­ரி­மாண ஒளி­வ­டி­வங்­கள், உயி­ரோ­வி­யப் படங்­கள் என பல அம்­சங்­களை நான் இயக்­கு­கி­றேன். பார­தி­யா­ரின் கவி­தை­க­ளி­லுள்ள உணர்­வு­களை இவை பிர­தி­ப­லிக்­கும்," என்று அக்­க­வி­தை­க­ளின் மொழி­பெ­யர்ப்­பு­க­ளைப் படித்­துள்ள மெர்­வின் கூறி­னார்.

மாறி­வ­ரும் கொவிட்-19 சூழ­லில் ஆரம்­பக்­கட்ட ஒத்­தி­கை­கள் தனித்­த­னி­யாக நடத்­தப்­பட்­டன. ஆயி­னும் மனத்­தி­டத்­து­டன் இவர்­கள் முயற்­சி­க­ளைத் தொடர்ந்­த­னர்.

"பார­தி­யின் வரி­களே எங்­க­ளுக்­குத் தொடர்ந்து ஊக்­க­மூட்­டின," என்ற குமாரி ஷ்ரேயா, "அத்­து­டன் எஸ்­பி­ள­னேட் தரப்­பி­னர் எங்­க­ளுக்கு உத­வி­யும் ஊக்­க­மும் தந்­த­னர்," என்று அவர் கூறி­னார்.

பாரதி படைப்­பு­களில் புத்­தாக்­கத்­திற்கு இடம் இருப்­ப­தா­கக் கூறி­னர் இயக்­கு­னர் குமாரி ஷிரே­யா­வும் பாட­கர் ­திரு நிஷாந்­தும்.

"பார­தி­யார் இசைத் திற­னும் பயிற்­சி­யும் பெற்­ற­வர். தமது கவி­தை­கள் சில­வற்­றுக்கு ராகங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கி­றார். இருப்­பி­னும் வரை­ய­றை­க­ளைத் தாண்டி இசை­யி­லும் புதுமை செய்ய விரும்­பி­னோம். எல்­லை­க­ளைக் கடந்து செல்ல விரும்­பி­னோம்," என்­று திரு விக்­னேஷ் தெரிவித்தார்.

"தழல் வீரத்­தில் குஞ்­சென்­றும் மூப்­பென்­றும் உண்டோ என்ற கவிதைவரி, இளை­யர்­கள் மீது பார­தி­யார் வைத்­தி­ருந்த நம்­பிக்­கைக்கு என்றுமே சான்றாகும். பார­தி­யின் படைப்­பு­க­ளுக்கு நாங்­கள் தந்த வடி­வம் இளை­யர்­களை நிச்­ச­யம் ஈர்­க்­கும் என்று நம்­பு­கி­றோம்," என்றார் திரு விக்­னேஷ்.

கி. ஜனார்த்தனன்

மகா­கவி சுப்­பிர­ம­ணிய பார­தி­யார் மறைந்த 100ஆவது ஆண்டை அனு­ச­ரிக்­கும் வித­மாக சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு நடத்­தப்­பட்டு வந்த பல்­வேறு நிகழ்ச்­சி­களை நிறைவு செய்­யும் இசை நிகழ்ச்சி ஒன்று, வரும் 19ஆம், 20ஆம் தேதி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

'நிமிர்ந்த நன்­னடை' எனும் இந்­நி­கழ்ச்­சிக்கு சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைச் சங்­கத்­தின் முன்­னாள் மாண­வர்­கள் ஏற்­பாடு செய்­துள்­ள­னர். எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்­கம் ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தும் கலா உட்­ச­வத்­தின் பகு­தி­யாக நிகழ்ச்சி இடம்­பெ­று­கிறது.

பார­தி­யா­ருக்கு இசை அஞ்­ச­லி­யைச் சமர்ப்­பிக்­கும் யோசனை கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உரு­வா­ன­தாக நிகழ்ச்­சி­யின் கலை இயக்­கு­நர் வி எம் சாய் விக்­னேஷ் தெரி­வித்­தார்.

"சக இயக்­கு­ந­ரான ஷ்ரேயா கோபி தேவை­யான அடிப்­படை ஆய்­வைச் செய்­த­பின்­னர் என்னை இந்த முயற்­சி­யில் இணைத்­தார்.

"பார­தி­யா­ரின் கொள்­ளுப்­பே­ர­னும் இசை நிபு­ண­ரு­மான டாக்­டர் ராஜ்­கு­மார் பார­தியை நாங்­கள் அணு­கி­னோம். சில கவி­தை­க­ளுக்கு இசை­ய­மைக்­கும்­படி நாங்­கள் முன்­வைத்த வேண்­டு­கோளை அவர் ஏற்­றுக்­கொண்­டார்," என்று திரு விக்­னேஷ், 37, கூறி­னார்.

நிகழ்ச்­சிக்­கான பணி­கள் கடந்­தாண்டு மும்­மு­ர­மாக தொடங்­கி­ய­தாக குமாரி ஷ்ரேயா கோபி, 31, தெரி­வித்­தார்.

"தாள உத­விக்கு டி ஆர் சுந்­த­ரே­சன், மேற்­கத்­திய இசை அமைப்­புக்கு இணை பேரா­சி­ரி­யர் டோனி மெக்­க­ரோம் என பல நல்ல திற­னா­ளர்கள் இதில் கைகோர்க்க இணங்­கி­னர்," என்றார் ஷ்ரேயா.

உற்­சா­கம் தரும் பார­தி­யின் வரி­கள்

அச்­ச­மில்லை, பாப்பா பாட்டு, சென்­றது மீளாது, புது­மைப் பெண், பகை­வ­னுக்கு அருள்­வாய், தெளிவு, ஆத்ம ஜயம், அக்­கி­னிக் குஞ்­சொன்று கண்­டேன், யோக சித்தி ஆகிய பாடல்­க­ளின் பகு­தி­கள் இந்­நி­கழ்ச்­சிக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

"இக்­க­வி­தை­க­ளின் வரி­கள் மிக­வும் இயல்­பா­கவே கேட்­ப­வ­ருக்கு உற்­சா­கத்­தைத் தரக்­கூ­டி­யவை. அத­னால் தன்­னம்­பிக்கை எனும் இந்­நி­கழ்ச்­சி­யின் கருப்­பொ­ருள் இயல்­பா­கவே அமைந்­து­விட்டது," என்­றார் குமாரி ஷ்ரேயா.

பாரதியார் அர­சி­யல், சமூ­கம், என புறத்­தில் செயல்­பட்ட புரட்­சி­யா­ளர் மட்­டு­மல்ல. மனி­தர்­க­ளின் உணர்­வு­களை மேல்­நி­லைக்கு ஏற்­றும் பணி­யான அகப் புரட்­சி­யி­லும் ஈடு­பட்­டதை இவ­ரது கவி­தை­கள் தெளி­வா­கக் காட்­டு­வ­தாக இயக்குநர்கள் தெரி­வித்­த­னர்.

பார­தி­யார் கவி­தை­களை மேலும் ஆழ­மாக ரசிக்க விரும்­பு­வோர் எந்த மொழி­யைத் தெரிந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும் தயங்­கா­மல் வரும்­படி நிகழ்ச்­சி­யின் தயா­ரிப்­புக் குழு கேட்­டுக்­கொண்­டது. அதன் பொருட்டு, பார­தி­யார் கவி­தை­க­ளின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பு­கள் அடங்­கிய கையே­டு­கள் நிகழ்ச்சி பார்­வை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

நிகழ்ச்சியில் பாரம்­ப­ரிய இசை, மேற்­கத்­திய இசைக் கல­வை­யு­டன் கர்­நா­டக சங்­கீத வாய்ப்­பாட்­டும் இடம்பெறும்.

திரு விக்­னே­ஷு­டன் நிஷாந்த் தியா­க­ரா­ஜன் வாய்ப்­பாட்­டில் இணை­வர். திரு­வாட்டி சௌந்­தர்யா கல்­யான் வாய்ப்­பாட்­டு­டன் வய­லின் இசைக்­க­வி­ருக்­கி­றார்.

சுசந்தா சௌத்ரி சித்­தா­ரை­யும் இசுரு விஜய்­சோமா கித்­தா­ரை­யும் வாசிப்­பர். குமார் மோகன் கீபோர்­டை­யும் யுஜீன் டியோ பல்­வேறு தாள வாத்­தி­யங்­க­ளை­யும் வாசிப்­பர்.

பார­தி­யார் கவி­தை­க­ளைப் பலர் அறிந்­தி­ருந்­தா­லும் அதனை இசை­யு­டன் ரசிக்­கும் ஒவ்­வொரு அனு­ப­வ­மும் புது­மை­யா­னது என்­றார் நிஷாந்த் தியா­க­ரா­ஜன், 27.

"கவிதை வரி­கள் மாறாது. ஆனால் அத­னு­டன் சேரும் இசை வேறு வடி­வம் பெறும்­போது, நாம் அந்த வரிகளைப் புரிந்­து­கொள்­ளும் விதம் மாறு­ப­டு­கிறது. நிகழ்ச்­சி­யில் பாடும் நான் இதனை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

ஒலிப்­ப­டைப்­புக்கு அழகு சேர்க்­கும் வித­மாக வண்­ணப் படங்­க­ளை­யும் ஒளி வடி­வங்­க­ளையும் நிகழ்ச்­சி­யின்­போது காண்­பிக்­க­வுள்­ளார் 30 வயது மெர்­வின் வோங்.

"முப்­ப­ரி­மாண ஒளி­வ­டி­வங்­கள், உயி­ரோ­வி­யப் படங்­கள் என பல அம்­சங்­களை நான் இயக்­கு­கி­றேன். பார­தி­யா­ரின் கவி­தை­க­ளி­லுள்ள உணர்­வு­களை இவை பிர­தி­ப­லிக்­கும்," என்று அக்­க­வி­தை­க­ளின் மொழி­பெ­யர்ப்­பு­க­ளைப் படித்­துள்ள மெர்­வின் கூறி­னார்.

மாறி­வ­ரும் கொவிட்-19 சூழ­லில் ஆரம்­பக்­கட்ட ஒத்­தி­கை­கள் தனித்­தனி­யாக நடத்­தப்­பட்­டன. ஆயி­னும் மனத்­தி­டத்­து­டன் இவர்­கள் முயற்­சி­க­ளைத் தொடர்ந்­த­னர்.

"பார­தி­யின் வரி­களே எங்­க­ளுக்­குத் தொடர்ந்து ஊக்­க­மூட்­டின," என்ற குமாரி ஷ்ரேயா, "அத்­து­டன் எஸ்­பி­ள­னேட் தரப்­பி­னர் எங்­க­ளுக்கு உத­வி­யும் ஊக்­க­மும் தந்­த­னர்," என்று அவர் கூறி­னார்.

பாரதி படைப்­பு­களில் புத்­தாக்­கத்­திற்கு இடம் இருப்­ப­தா­கக் கூறி­னர் இயக்­கு­னர் குமாரி ஷிரே­யா­வும் பாட­கர் ­திரு நிஷாந்­தும்.

"பார­தி­யார் இசைத் திற­ன் பயிற்­சி­யும் பெற்­ற­வர். தமது கவி­தை­கள் சில­வற்­றுக்கு ராகங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கி­றார். இருப்­பி­னும் வரை­ய­றை­க­ளைத் தாண்டி இசை­யி­லும் புதுமை செய்ய விரும்­பி­னோம். எல்­லை­க­ளைக் கடந்து செல்ல விரும்­பி­னோம்," என்­று திரு விக்­னேஷ் தெரிவித்தார்.

"தழல் வீரத்­தில் குஞ்­சென்­றும் மூப்­பென்­றும் உண்டோ என்ற கவிதைவரி, இளை­யர்­கள் மீது பார­தி­யார் வைத்­தி­ருந்த நம்­பிக்­கைக்கு என்றுமே சான்றாகும். பார­தி­யின் படைப்­பு­க­ளுக்கு நாங்­கள் தந்த வடி­வம் இளை­யர்­களை நிச்­ச­யம் ஈர்­க்­கும் என்று நம்­பு­கி­றோம்," என்றார் திரு விக்­னேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!