தினமும் 3,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி

தினமும் 3,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி

2 mins read
ffe97cf2-8810-4f4c-8ae5-ef0e44c0f109
வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக வருகை முன்னோடித் திட்டம் செப்டம்பரில் தொடங்கியது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் டிசம்­பர் 3 முதல் பொது இடங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். நாள் ஒன்­றுக்கு 3,000 வரை­யி­லான ஊழி­யர்­கள் அவ்­வாறு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்ற அறி­விக்­கப்­பட்டுள்­ளது. அதன்­படி, வாரத்­திற்கு 21,000 ஊழி­யர்­கள் பொது இடங்­க­ளுக்­குச் செல்­ல­லாம். தற்­போது அந்த எண்­ணிக்கை வாரத்­திற்கு 3,000ஆக உள்­ளது.

மேலும், லிட்­டில் இந்­தியா அல்­லது கேலாங் சிராய் போன்ற பகு­தி­க­ளுக்­குச் செல்ல இனி அவர்­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு இல்லை. எங்கு செல்­ல­வேண்­டும் என்­பதை அவர்­கள் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்­ள­லாம்.

அத்­து­டன், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளுக்கு இனி தின­மும் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். தற்­போது வாரத்­திற்கு மூன்று முறை மட்­டுமே செல்ல அவர்­க­ளுக்கு அனு­மதி உண்டு.

அதற்கு வச­தி­யாக தற்­போது நான்கு மணி நேர­மாக உள்ள பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளின் வேலை நேரம் இனி எட்டு மணி நேர­மாக நீட்­டிக்­கப்­படும்.

தீவு முழு­வ­தும் எட்டு பொழு­து­போக்கு நிலையங்கள் உள்­ளன. தற்­போது அந்த ஊழி­யர்­கள் குறிப்­பிட்ட நிலை­யங்­க­ளுக்கு மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

டிசம்­பர் நடுப்­ப­கு­தி­யில் இருந்து அவர்­கள் எட்டு பொழு­து­போக்கு நிலையங்­க­ளுக்­கும் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், கொவிட்-19க்கான அமைச்­சு­கள் நிலை பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

தங்­கு­வி­டு­தி­களில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான நட­மாட்­டக் கட்­டுப்­பாடு கடை­சி­யாக அக்­டோ­பர் 30ஆம் தேதி சிறிது விலக்­கப்­பட்­டது. வாரம் ஒன்­றுக்கு பொது இடங்­களில் அனு­ம­திக்­கப்­படும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அப்­போது 500லிருந்து 3,00ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

செப்­டம்­ப­ரில் தொடங்­கப்­பட்ட சமூக வரு­கைக்­கான முன்­னோ­டித் திட்­டத்­திற்கு வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளி­டையே நல்ல வர­வேற்பு இருந்­த­தாக டாக்­டர் டான் தெரி­வித்­துள்­ளார்.

அவ்­வாறு சமூக வரு­கை­யில் பங்­கேற்­ற­வர்­க­ளி­டம் இது­வரை தொற்று எது­வும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 98 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தா­க­வும் கூடு­தல் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்­றோ­ரில் 81 விழுக்­காட்­டி­னர் அத­னைப் போட்­டுக் கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

தற்­போது முதல் 2022 ஜன­வரி வரை முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 61 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெ­று­வர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் டிசம்பர் 3 முதல் பொது இடங்களுக்குச் செல்லலாம்