கடந்த சில வாரங்களாக
வெளிநாட்டு ஊழிய தங்கு
விடுதிகளில் கொவிட்-19 தொற்று நிலைபெற்று உள்ளதாகவும் கடந்த வாரத்தில் அவர்களிடை
யிலான அன்றாடத் தொற்று சராசரியாக 143ஆக இருந்தது பிசிஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
"தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் வாராவாரம் பரிசோதனைக்குச் செல்லவேண்டும். ஏற்கெனவே தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு இது தேவைப்படாது," என்று அது தெரிவித்துள்ளது.

