சுமார் 5.9 மில்லியன் பேரின் தகவல்கள் இணையத்தில் கசிவு

சுமார் 5.9 மில்லியன் பேரின் தகவல்கள் இணையத்தில் கசிவு

2 mins read
b216e72e-6edc-41fd-a2b1-fe9057d91bc3
சிங்கப்பூரில் உள்ள ரெட்டோர்ஸ் அலுவலகங்களில் ஒன்று, வெஸ்டர்ஹவுட் ரோட்டில் அமைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ரெட்­டோர்ஸ்' (RedDoorz) எனும் ஓட்­டல் அறை­க­ளுக்­குப் பதிந்­து­கொள்­ளும் இணை­யத்­த­ளத்­தின் கிட்­டத்­தட்ட 5.9 மில்­லி­யன் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­கள் இணை­யத்­தில் கசி­ய­வி­டப்­பட்­டுள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சிங்­கப்­பூ­ரர்­களும் தென் கிழக்­கா­சிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய தக­வல் கசிவு என்று அர­சாங்­கம் இதை வரு­ணித்­துள்­ளது.

இணை­யத்­த­ளத்தை நடத்­தும் 'கொம்­மெ­ஷர்' (Commeasure) எனும் உள்­ளூர் நிறு­வ­னத்­துக்கு தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு ஆணை­ யம் $74,000 அப­ரா­தம் விதித்­துள்­ளது.

இது, 2018ஆம் ஆண்டு நடந்த தக­வல் கசி­வுக்­காக சிங்­ஹெல்த் நிறு­வ­னத்­துக்­கும் 'இன்­ட­கி­ரே­ட்டட் ஹெல்த் இன்­ஃபர்­மே­ஷன் சிஸ்­டம்ஸ்' நிறு­வ­னத்­துக்­கும் ஒரு­சேர விதிக்­கப்­பட்ட $1 மில்­லி­யன் அப­ரா­தத்­தை­விட இது மிகக் குறை­வான தொகை­யா­கும்.

கொவிட்-19 நோய்ப் ­ப­ர­வ­லால் விருந்­தோம்­பல் துறைக்கு ஏற்­பட்­டுள்ள பெரும் பாதிப்­பைக் கருத்­தில் எடுத்­துக்கொண்டு அப­ரா­தத்­தைத் தீர்­மா­னித்­த­தாக ஆணை­யம் கூறி­யது. ஆணை­யம் அதன் முடி­வைக் கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்­டது.

தனிப்­பட்­ட தக­வல் பாது­காப்புச் சட்­டம் நடப்­புக்கு வந்­த­தி­லி­ருந்து ஏற்­பட்­டுள்ள ஆகப் பெரிய தக­வல் கசிவு இது என்று ஆணை­யம் கூறி­யது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடப்­புக்கு வந்த சட்­டத்­தின் கீழ், இணை­யத்­தில் தக­வல் கசி­வுக்­காக ஒரு நிறு­வ­னத்­துக்கு அதி­க­பட்­ச­மாக ஒரு மில்­லி­யன் அப­ரா­தம் விதிக்­க­லாம். ஆனால் அடுத்த ஆண்டு பிப்­­ரவ­ரி­யி­லி­ருந்து இந்த அப­ரா­தத் தொகை உயர்த்­தப்­படும்.

நிறு­வ­னங்­க­ளின் ஆண்டு வரு­மா­னத்­தில் 10% வரை­யி­லான தொகை அல்­லது ஒரு மில்­லி­யன் வெள்ளி ஆகிய இரண்­டி­லும் அதி­க­மா­னது அப­ரா­த­மாக விதிக்­கப்­ப­ட­லாம்.

கொம்­மெ­ஷர்ஸ் தக­வல் கசி­வில் வாடிக்­கை­யா­ள­ரின் பெயர், தொடர்பு விவ­ரங்­கள், மின்­னஞ்­சல் முக­வரி, பிறந்த தேதி, ரெட்­டோர்ஸ் கணக்­குக்­குள் நுழை­வ­தற்­கான மறைச்­சொல், ஓட்­ட­ல­றைப் பதி­வு­கள் குறித்த தக­வல்­கள் ஆகி­யவை கள­வா­டப்­பட்­டன.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் மறைச்­சொற்­கள் குறி­யீ­டாக மாற்­றப்­பட்­டவை. அவற்றை மீண்­டும் மாற்ற வழி கண்­டால் ஒழிய, கள­வா­டி­ய­வர்­க­ளால் அந்­தத் தக­வல்­க­ளைப் பயன்­ப­டுத்தமுடி­யாது என்று கூறப்­பட்­டது.

தக­வல்­க­ளைக் கள­வா­டி­ய­வர்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கடன் அட்டை எண்­க­ளைப் பெற­வில்லை.

ஆனால் மற்ற தனிப்­பட்ட தக­வல்­கள் கள­வா­டப்­பட்­ட­தால் பாதி­கப்­பட்­ட­வர்­க­ளைப்போல நடித்து, அவர்­க­ளின் மற்ற இணை­யக் கணக்­கு­க­ளைக் கைப்­பற்ற கள­வா­டி­ய­வர்­கள் முயற்சி செய்­யக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

கடந்­தாண்டு செப்­டம்­ப­ரில் ரெட்­டோர்­ஸின் தக­வல்­கள் களவாடப்­பட்­டன. அவை ஊடு­ரு­வல்­கா­ரர்­ க­ளுக்­கான இணை­யத்­த­ளத்­தில் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன. பின்­னர் அத்­த­க­வல்­கள் இணை­யத்­தி­ லிருந்து நீக்­கப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் இந்­தோ­னீ­சி­யர்­கள் என்­றும் சுமார் 9,000 பேர் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் ரெட்­டோர்ஸ் நிறு­ வ­னம் கூறி­யது.