விலங்குகளைக் கண்டறிய ரைஃபிள் ரேஞ்ச் சாலையில் அடுத்தாண்டு ஏற்பாடு

விலங்குகளைக் கண்டறிய ரைஃபிள் ரேஞ்ச் சாலையில் அடுத்தாண்டு ஏற்பாடு

1 mins read
37106608-72e5-4cc8-8b78-24efdb5d016a
ரைஃபிள் ரேஞ்ச் சாலையில் கட்டமைப்பைப் பொருத்துவதன் மூலம், அது சாலைப் போக்குவரத்து மாறுதல்களுக்கு ஏற்ப எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டறிய முடியும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரைஃபிள் ரேஞ்ச் சாலை­யில் செல்­லும் விலங்­கு­க­ளைக் கண்­ட­றி­யும் கட்­ட­மைப்பு அடுத்த ஆண்டு பிற்­பா­தி­யில் வைக்­கப்­ப­ட­வுள்­ளது. பழைய அப்­பர் தாம்­சன் சாலைக்­குப் பிறகு அந்­தச் கட்­ட­மைப்­பைப் பெறும் இரண்­டா­வது சாலை இது.

வன­வி­லங்­கு­கள் சாலை­க­ளைப் பாது­காப்­பா­கக் கடக்­க­வும் அவை கடப்­பதை வாக­ன­மோட்­டி­க­ளுக்­குத் தெரி­விக்­க­வும் அந்தக் கட்­ட­மைப்பு உத­வும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, நேற்று இதை அறி­வித்­தார்.

மேலும், வன­வி­லங்­கு­கள் பற்­றிய பொது­மக்­க­ளின் கண்­ணேட்­டத்­தைப் பற்­றி அறிய முனை­யும் இரண்டு ஆய்­வு­கள் அடுத்த ஆண்டு தொடங்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

அத்­து­டன், பொது­மக்­கள் குரங்­கு­க­ளுக்கு உணவு அளிப்­ப­தற்கு எதி­ராக ஜேன் குடால் கழ­கம் (சிங்­கப்­பூர்) நடத்­தும் விழிப்­பு­ணர்வு இயக்­கத்­தைப் பற்றி அமைச்­சர் மேல்­வி­வ­ரம் அளித்­தார்.

அக்­க­ழ­கம் நடத்­திய மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் பேசி­னார்.