கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

2 mins read
d4dead0f-c0e9-4521-ad96-01ec9b797a2f
கடந்த 13ஆம் தேதி முதல் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கண்காட்சி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'தி ராயன் ஃபெளண்­டே­ஷன்' எனும் லாப­நோக்­க­மற்ற கலைத்­துறை அமைப்பு, 'காவ்ஸ்:ஹாலிடே' எனும் பொம்­மைக் கண்­காட்­சி­யில் தொடர்­பு­டைய பல்­வேறு தரப்­பு­ களுக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ ம­திப்பு வழக்­கைத் தொடுத்­துள்­ளது. கண்­காட்­சி­யை­யும்

அதன் தொடர்­பான விளம்­பர நிகழ்ச்­சி­க­ளை­யும் நிறுத்­த­வேண்­டும் என்ற நீதி­மன்ற ஆணை­யின்­படி அந்­தத் தரப்­பு­கள் நடக்­க­வில்லை என்று அதற்­குக் கார­ணம் கூறப்­பட்­டது.

அதன் தொடர்­பில் தி ராயன் ஃபெளண்­டே­ஷன் நேற்று முன்­ தினம் மாலை உயர் நீதி­மன்­றத்­தில் விண்­ணப்­பித்­தது.

கண்­காட்­சி­யின் ஏற்­பாட்­டா­ளர் ஆல்­ரைட்ஸ்­ரி­சர்வ்ட் (AllRightsReserved), அதன் நிறு­வ­னர், கண்காட்சிக்கான தொடர்­பு நிறு­வ­னத்தின் நிறு­வ­னர்­கள், அதில் பணியாற்றிய பாது­கா­வல் நிறு­வ­னம் ஆகிய தரப்­பு­க­ளின் மீது வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

கண்­காட்­சியை நிறுத்­தும் நீதி­மன்ற ஆணையை ஆல்­ரைட்ஸ்­ரி­சர்வ்ட் நிறு­வ­னத்­தின் பிர­தி­நிதி ஒரு­வ­ரி­டம் கடந்த சனிக்­கி­ழமை வழங்­கி­ய­தாக அமைப்பு கூறி­யது.

சமூக ஊட­கத்­தில் செல்­வாக்­குள்ள பிர­ப­லங்­க­ளுக்­குச் சிறப்பு முன்­னோட்­டக் காட்சி தொடங்­கும் பத்து நிமி­டத்­துக்கு முன்­னர் நீதி­மன்ற ஆணை வழங்­கப்­பட்­ட­தாக அமைப்பு கூறி­யது.

ஆனால் ஆல்­ரைட்ஸ்­ரி­சர்வ்ட் அந்த முன்­னோட்­டக் காட்­சி­யைத் தொடர்ந்து நடத்­தி­யது. அந்­நி­று­ வ­னம் நீதி­மன்ற உத்­த­ரவை அலட்சியப் ­ப­டுத்­தி­ய­தாக தி ராயன் ஃபெளண்­டே­ஷன் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

காவ்ஸ் எனும் புகழ்­பெற்ற அமெ­ரிக்க ஓவி­யர் உரு­வா­க்­கிய 42 மீட்­டர் நீள­முள்ள பொம்­மையை சிங்­கப்­பூ­ரில் காட்­சிக்கு வைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டது.

ஆனால் தி ராயன் ஃபெளண்­டே­ஷன், கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர் தமது அறி­வு­சார் சொத்தை அத்­து­ மீறி பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் நம்­பிக்­கை மோசடி செய்தததாகவும் கூறி அதன் மீது வழக்கு தொடுத்­தது.

கண்­காட்­சியை நடத்­து­வ­தன் தொடர்­பில் ஆல்­ரைட்ஸ்­ரி­சர்வ்ட் நிறு­வ­னத்­து­டன் தி ராயன் ஃபெளண்­டே­ஷன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் அவை தோல்­வி­யுற்­றன.

கண்­காட்­சிக்கு ஆத­ரவு தந்த சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­க­மும் பொம்­மையை உரு­வாக்­கிய கலை­ஞ­ரான காவ்­ஸும் வழக்­கில் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.