கொவிட்-19 விதிமுறை; கடைக்காரர்கள் வரவேற்பு

கொவிட்-19 விதிமுறை; கடைக்காரர்கள் வரவேற்பு

3 mins read
271ad320-a4c8-4c7a-93b5-bebfb6335db6
-

இம்­மா­தம் இறு­தி­யி­லி­ருந்து ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒன்­றாக அமர்ந்து உணவு உண்ண அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது. ஆனால் அவர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டி­ருப்­பது அவ­சி­யம்.

இந்­தப் புதிய விதி­மு­றையை பொது­வாக உண­வங்­காடி கடைக்­கா­ரர்­களும் காப்­பிக் கடை உரி­மை­யா­ளர்­களும் வர­வேற்­றுள்­ள­னர்.

யூஹுவா வில்ேலஜ் ஈரச்­சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலைய சங்­கத் தலை­வர் வின்­சென்ட் கோ, 60, பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­க­ளு­டன் ஐவர் மற்­றும் இரு­வர் அமர்ந்து உணவு உண்­ப­தற்கு ஏது­வாக மேசை­கள் அமைக்­கப்­படும் என்­றார்.

"எங்­க­ளு­டைய ஈரச்­சந்தை நிலை­யம் கட்டப்பட்டு 30 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டது. 300க்கும் மேற்­பட்ட மேசை­கள் நெருக்­க­மாக அமைக்­கப்­பட்டு உள்­ளன. ஒரு மேசை­யில் ஐவர் அமர்ந்­தால் நெருக்­க­மாக உள்ள மற்­றொரு மேசையை காலி­யாக வைக்க வேண்­டும்," என்று அவர் வருத்­தப்­பட்­டார்.

"மேசை­கள் குறை­வாக இருக்­கும் நிலை­யில் ஐவ­ருக்­கான மேசை­யில் இரு­வர் அமர்ந்­தால் என்ன செய்­வது," என்று அவர் கேள்வி எழுப்­பி­னார். ஆனால் எல்­லா இடங்­களில் இந்­தப் பிரச்­சினை இல்லை.

உதா­ர­ண­மாக ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் புளோக் 347 ல் உள்ள யூஹுவா ஈரச்­சந்தை, உண­வங்­காடி நிலை­யம் சில ஆண்­டு­ க­ளுக்கு முன்பு புதுப்­பிக்­கப்­பட்­ட­தால் மேசை­கள் அதிக இைடவெளி­ யு­டன் அமைக்­கப்­பட்­டுள்­ளன. முதி­யோர் மற்­றும் சக்­கர நாற்­கா­லி­யில் வரு­ப­வர்­களும் எளி­தாகச் சென்று வர முடி­யும்.

வேறு­பட்ட தடுப்­பூசி நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்த உண­வங்­காடி நிலை­யம் மற்­றும் காப்­பிக் கடை உரி­மை­யா­ளர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­ப­டு­வ­தாக கடந்த திங்­கட்­கி­ழமை சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வரு­கைப் பதிவு மூலம் உணவு உண்­ப­வர்­க­ளின் விவ­ரங்­களை சரி பார்க்க வேண்­டும். ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவர் அமர்ந்து உண் ­ப­தற்கு இம்­மா­தம் இறு­தி­யில் முதல் குழு­வைச் சேர்ந்த உண­வங்­காடி நிலை­யங்­களில் கட்­டுப்­பாடு, சோதனை முறை அறி­மு­கப்­ப­டுத்­தப் பட­வி­ருக்­கிறது. இம்­முறை பின்­னர் மற்ற இடங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் எனத் தெரி­கிறது.

புதிய சோதனை முறை­யின் விவ­ரங்­களை அமைச்சு வெளி­யி­ட­வில்லை. மரின் பரேட் கடைக்­கா­ரர்­கள் சங்­கத்­தின் தலை­வர் தையா பூன் ஹின், 55, "ஐவர் வரை சேர்ந்து உணவு உண்­பது குடும்ப உறுப்­பி­னர்­களை மகிழ்ச்சி அடை­யச் செய்­யும்," என்று குறிப்­பிட்­டார்.

காப்­பிக் கடை­களும் இரு­வர், ஐவர் என மேசை­க­ளைப் பிரிப்­ப­தில் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றன. தேக்கா நிலைய உண­வங்­கா­டி­யில் பணி­பு­ரி­யும் பெ. முரு­கே­சன், 53, "ஐவர் அம­ரும் மேசை­யில் இருவர் அல்­லது மூவர் அமர்ந்­தா­லும் ஒன்­றும் சொல்­ல ­மு­டி­யாது. கூடிய விரை­வில் இந்த கட்­டுப் ­பா­டு­கள் முற்­றி­லும் அகற்­றப்­பட்­டால்­தான் அனை­வ­ருக்­கும் எளி­தாக இருக்­கும்," என்று கூறி­னார்.

"புதிய நடைமுறையால் இன்னும் அதிகமானோர் உணவருந்த வரு வார்கள் என்று நம்புகிறோம்," என்று கூறிய வெஸ்ட் கோஸ்ட் உணவங் காடியில் கடை நடத்தும் முகமது முசாஹுதீன், 48, "ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப் போது சேர்ந்து வந்து சாப்பிட நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது, இதனால் வியாபாரம் பெருகும்," என்றார்.

(கூடுதல் செய்தி: இர்ஷாத் முஹம்மது)

சிராங்கூன் கார்டன்ஸ் ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் உணவு உண்ணும் வாடிக்கை யாளர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமர்ந்து உண்ண விதிமுறை தளர்த்தப் பட்டுள்ளது.

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்