இரு தரப்பு பயண ஏற்பாடு; சிங்கப்பூர், இந்தோனீசியா தீவிர ஆலோசனை

இரு தரப்பு பயண ஏற்பாடு; சிங்கப்பூர், இந்தோனீசியா தீவிர ஆலோசனை

1 mins read
49bcfaf1-e636-4cc4-86b2-695e1e68039e
-

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சிய வெளி­ யு­றவு அமைச்­சர்­கள், இரு தரப்பு பயண ஏற்­பா­டு­கள் குறித்து தீவிர ஆலோ­சனை நடத்­தி­யுள்­ள­னர்.

இத­னால் இரு நாடு­க­ளுக்கும் இடையே 'விடி­எல்' எனும் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான பாதை விரை வில் திறக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

வரும் நவம்­பர் 29ஆம் தேதி யிலிருந்து தனி­மைக் கட்­டுப்­பாடு இல்­லா­மல் இந்­தோ­னீ­சியப் பய­ணி­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என சிங்கப்­பூர் அறி­வித்த மறு­நாளே புதிய ஏற்­பாடு குறித்து இரு அமைச்­சர்­களும் விவா­தித்­துள்­ள­னர்.

இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மர்­சுடி நேற்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னிடம் பேசி­னார். அப்­போது இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்புப் பற்றி முக்­கி­ய­மா­கப் பேசப்­பட்­டது. குறிப்­பாக 'விடி­எல்' பயண ஏற்­பாடு பற்­றிய விவா­தங்­க­ளைத் தொடர இரு தரப்­பி­ன­ரும் ஒப்­புக் கொண்­ட­னர் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு தனி­மைப்படுத்தல் இல்லா பய­ணத்­துக்கு சிங்­கப்­பூர் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இதனை எப்­ப­டிச் செயல்­ப­டுத்­து­வது என்­ப­தை­யும் அமைச்­சர்­கள் ஆலோ­சித்­த­னர். சில குறிப்­பிட்ட வரம்­பு­க­ளு­டன் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு இந்­தத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் திரு ரெட்­னோ­வி­டம் தெரி­வித்து உள்ளார்.

விதி­முறை அம­லாக்­கல் கட்­ட­மைப்­பில் உள்ள நம்­பிக்கை, இந்­தோ­னீ­சி­யா­வின் கொவிட்-19 சூழல், தடுப்­பூசி போட்­டோ­ரின் விகி­தம் போன்­றவை சிறப்புப் பயண ஏற் பாட்டுக்கு முக்கியம் என்று அமைச்­சர் விவி­யன் வலியுறுத்தியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.