கிருமித்தொற்றிய சிங்கங்கள் குணமடைந்து வருகின்றன

கிருமித்தொற்றிய சிங்கங்கள் குணமடைந்து வருகின்றன

1 mins read
b76bf89a-5fed-4c94-b3fb-1ca2c214ca65
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் தேறி வருகின்றன.படம்: மண்டாய் வனவிலங்கு குழுமம் (ஏஎஃப்பி) -

கடந்த வாரம் கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்ட ஐந்து சிங்­கங்­கள் உடல்­ந­லம் தேறி வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்து வரும் அவற்­றின் பரா­ம­ரிப்­பா­ளர்­ க­ளி­டம் இலே­சான அறி­கு­றி­களே தென்­பட்­டன. சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தி­லும் நைட் சஃபாரி­யி­லும் வசிக்­கும் அந்­தச் சிங்­கங்­கள், தத்­தம் குகை­களில் குண­ம­டைந்து வரு­கின்­றன. பொது­மக்­க­ளின் பார்­வை­யில் அவை தென்­பட மாட்டா.

நைட் சஃபாரி­யில் வசிக்­கும் சிங்­கங்­கள் தெளி­வா­க­வும் சுறு ­சுறுப்போடு இருப்­ப­தாகவும் அமைச்­சர் ஓங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

அவற்­றுக்கு வைட்­ட­மின் மற்­றும் ஊட்­டச்­சத்து உணவு வழங்கப் ­ப­டு­வ­தா­க­வும் அவை நன்கு சாப்­பி­டு­வ­தா­க­வும் திரு ஓங் கூறினார்.

கடந்த வாரம், நைட் சஃபாரி­யில் நான்கு 'ஏஷி­யாட்­டிக்' சிங்­கங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் ஓர் ஆப்­பி­ரிக்க சிங்­கத்­துக்­கும் கொவிட்-19 தொற்று உறு­தி­ செய்யப்பட்டது.

மண்­டாய் வன­வி­லங்கு குழு­மத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளு­டன் அந்­தச் சிங்­கங்­கள் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தன. அந்த ஊழி­யர்­க­ளைக் கிருமி தொற்­றி­யி­ருந்­தது.

அந்த ஐந்து சிங்­கங்­க­ளி­டம் இரு­மல், தும்­மல், சோம்­பல் உள்­ளிட்ட இலே­சான அறி­கு­றி­கள் தென்­பட்­டன.