12,000 கப்பல் சிப்பந்திகளுக்கு தடுப்பூசிகள் போடப்படும்

12,000 கப்பல் சிப்பந்திகளுக்கு தடுப்பூசிகள் போடப்படும்

1 mins read
bcb3185e-9038-4fbd-8c7a-125930afe64c
-

சிங்­கப்­பூ­ரில் 8,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு கப்­பல் சிப்­பந்­தி ­களுக்கு குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யா­வது போடப்­பட்­டுள்­ளது. கப்­பல் துறை­யில் பணி­யாற்­றும் சிப்­பந்­தி­க­ளுக்கு உல­க­ளா­விய தடுப்­பூசி போடும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக மேலும் 12,000 சிப்­பந்­தி­ க­ளுக்கு தடுப்பூசி போடப்­ப­டும்.

தடுப்­பூசி போட்ட 8,000 பேரில் வெளி­நாட்டு கட­லோ­டி­களில் 5,200 பேர் சிங்­கப்­பூ­ரில் வசித்து வரு­கின்­ற­னர். எஞ்­சி­யோர், உல்­லா­சக் கப்­பல் மற்­றும் வட்­டார கப்­பல்­களில் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து அவர்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­ய­மும் சிங்­கப்­பூர் கப்­பல் சங்­க­மும் அனைத்­து­லக பங்­கா­ளி­க­ளு­டன் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மேலும் 12,000 கப்­பல் சிப்­பந்­தி­கள் முதல், இரண்­டா­வது அல்­லது பூஸ்­டர் தடுப்­பூ­சியை இப்­போது முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30க்குள் போட்­டுக் கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.