லஞ்சம்: முன்னாள் பொ.ப.க அதிகாரிக்குத் தண்டனை

லஞ்சம்: முன்னாள் பொ.ப.க அதிகாரிக்குத் தண்டனை

2 mins read
d289d2c9-fc9c-485e-875a-c10b4a457c9c
-

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தில் உதவிப் பொறி­யா­ள­ராக பணி­யாற்றிய ஜமா­லு­தின் முகம்­மது, 58, என்ற அதி­காரி அந்­தக் கழ­கத்­தின் ஒப்­பந்­ததா­ரர்­களும் துணை ஒப்­பந்த தாரர்­களும் மேற்­கொள்­ளும் பணி­களை மேற்­பார்­வை­யி­டும் பொறுப்­பில் இருந்­தார்.

தண்­ணீர், எரி­வாயுக் குழாய் பதிப்பு துணை ஒப்­பந்த நிறு­வ­ன­மான 'பைப் ஒர்க்ஸ்' என்ற நிறு­வனத்தை மேற்­பார்­வை­யிட்­ட­போது அவர் அந்த நிறு­வ­னத்­தின் திட்ட நிர்­வா­கியை அணு­கி­னார்.

பணம் வாங்­கிக்கொண்டு அந்த நிறு­வ­னத்­தின் பணி­களை வேக­மாக முடிக்க வச­தி­களைச் செய்து கொடுக்க ஜமா­லு­தின் இணங்­கி­னார். ஒன்­பது மாத காலத்­தில் அவர் மொத்­தம் $45,169 தொகை­யைப் பெற்­றுக்­கொண்­டார்.

லஞ்­சம் பெற்­ற­தற்­காக ஜமா­லு­தி­னுக்கு நேற்று ஒன்­பது மாதம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஒரு கட்­டு­மான பொறி­யி­யல் நிறு­வ­னத்­தி­டம் இருந்து லஞ்­சம் பெற முயன்­ற­தற்­காக அவ­ருக்கு 10 வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கணக்­கு­களில் பொய் தக­வல்­க­ளைத் தெரி­வித்­த­தற்­காக அவ­ருக்கு இரண்டு வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்­தத் தண்­டனை, இதர சிறைத்­தண்­ட­னை­க­ளு­டன் ஏக­காலத்­தில் தொடங்­கும்.

லஞ்­ச­மா­கப் பெற்­றுக்­கொண்ட தொகையைத் தண்­டத் தொகை­யாகச் செலுத்­தும்­படி அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. செலுத்த தவ­றி­னா­ல் மூன்று மாதம் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டும்.

குற்­றங்­களை ஜமா­லு­தின் ஒப்புக்­கொண்­டார்.

பைப் ஒர்க்ஸ் நிறு­வ­னத்­தின் திட்ட நிர்­வா­கி­யான கணே­சன் சுப்பையா என்பவர் மீது ஆகஸ்ட் மாதம் ஓர் ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

ஜமா­லு­தின் ரசீ­து­களில் பொய் தக­வல்­களை இடம்­பெ­றச் செய்ய உடந்­தை­யாக இருந்­த­தா­கக் கூறும் இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் கணே­சன் எதிர்­நோக்­கு­கி­றார்.

இவ­ரது வழக்கு, விசா­ர­ணைக்கு முந்­தைய விசா­ரணைக் கட்­டத்­தில் இருக்­கிறது.