'வேலைகள் பற்றிய கவலைகளைச் சமாளிக்க தொழிலாளர் இயக்கம் உருமாற வேண்டும்'

1 mins read
18f018db-597f-4d6d-838d-e294d802d1be
தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் சாதா­ர­ணப் பேரா­ளர்­கள் மாநாட்டில் கலந்துகொண்ட துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்டும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே. தனலெட்சுமியும் கைகூப்பி வணக்கம் கூறினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை­கள் குறித்த தற்கால, வருங்­கா­லக் கவ­லை­க­ளைச் சமா­ளிக்க, தொழி­லா­ளர் இயக்­கம் தன்னை உரு­மாற்­றிக் கொள்­ள­வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

ஊழி­யர்­களை வெற்­றி­பெற வைக்க, தொழி­லா­ளர் இயக்­கம், நிறு­வ­னங்­க­ளு­டன் இன்­னும் அதி­க­மாக நேர­டி­யா­கப் பணி­யாற்றி அவற்­றின் வர்த்­த­கங்­களை மாற்­ற­வேண்­டும் என்று திரு ஹெங் கூறி­னார்.

வேலைச் சந்­தை­யின் மாற்­றத்­துக்கு ஏற்ப, தொழி­லா­ளர் இயக்­கம் இன்­னும் அதி­க­மா­னோ­ருக்கு சேவை­யாற்ற வேண்­டும். அதற்கு இயக்­கம் இன்­னும் அதி­க­மான ஊழி­யர்­களை அணு­க­வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

மேலும், ஊழி­யர்­க­ளின் வாழ்­நாள் தேவை­களை இன்­னும் முழு­மை­யான முறை­யில் தொழி­லா­ளர் இயக்­கம் நிறை­வு­செய்ய வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் சாதா­ர­ணப் பேரா­ளர்­கள் மாநாட்­டில் துணைப் பிர­த­மர் கலந்து­ கொண்டு உரை­யாற்­றி­னார்.

சென்ற 2019ஆம் ஆண்­டில் கடை­சி­யாக அந்த மாநாடு நடத்­தப்­பட்­டது.

அதன் பிறகு, தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் ஆத­ரவு அளிப்­ப­தில் தொழி­லா­ளர் இயக்­கம் கண்ட முன்­னேற்­றம் பற்றி மாநாட்­டில் ஆரா­யப்­பட்­டது.

'ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்­தோசா' ஒருங்­கி­ணைந்த சுற்­று­லாத் தலத்­தில் அந்த ஒரு­நாள் மாநாடு இடம்­பெற்­றது.

சுமார் 750 பேர் இணை­யம் வழி­யா­க­வும் 500 பேர் நேர­டி­யா­க­வும் அதில் கலந்­து­கொண்­ட­னர். பல்­வேறு பாது­காப்பு நடை­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன.