'பிஎஸ்எல்இ' தேர்வு முடிவுகள் நவ. 24ஆம் தேதி வெளியாகும்

'பிஎஸ்எல்இ' தேர்வு முடிவுகள் நவ. 24ஆம் தேதி வெளியாகும்

2 mins read
3c4f3e11-4175-4a80-a10d-25b5752f0646
-

இவ்­வாண்­டின் தொடக்­கப் பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு முடி­வு­கள் அடுத்த புதன்­கி­ழமை 24ஆம் தேதி வெளி­யி­டப்­படும். மாண­வர்­கள் தங்­கள் வகுப்­ப­றை­க­ளுக்­குச் சென்று தேர்வு முடி­வு­க­ளைப் பெறுவ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­க­மும் கூட்­டாக வெளி­யிட்ட செய்தி அறிக்­கை­யில் இதைத் தெரி­வித்­தன.

தேர்வு முடி­வு­களை காலை 11 மணி­யி­லி­ருந்து மாண­வர்கள்­ பெற்றுக் கொள்­ள­லாம். முடி­வு­ களைப் பெற்­றுக்­கொள்­ளும் மாண­வர்­க­ளு­டன் பெற்­றோர் அல்­லது காப்­பா­ளர் ஒரு­வர் மட்­டும் உடன் செல்­ல­லாம் என்று அமைப்­பு­கள் கூறின.

ஆனால் பெற்­றோர் அல்­லது காப்­பா­ளர், வகுப்­ப­றை­க­ளுக்­குள் அல்­லது அவற்­றின் அருகே அனு­ ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

கூட்­ட­நெ­ரி­ச­லை­யும் ஒன்­று­ கூடு­வ­தை­யும் தவிர்க்க, பிள்­ளை­கள் வகுப்­ப­றை­களில் முடி­வு­க­ளைப் பெற்­றுக் கொள்­ளும்­போது பெற்­றோர் குறிப்­பி­டப்­பட்ட இடங்­களில் காத்­தி­ருக்க வேண்­டும்.

"மாண­வர்­கள் நேர­டி­யா­கச் சென்று தேர்வு முடி­வு­களைப் பெற்­றுக் கொள்­வது அவர்­க­ளின் கல்­விப் பய­ணத்­தில் முக்­கிய அங்­கம். அது சக வகுப்பு மாண­வர்­க­ளு­டன் ஒன்­றாய் இருக்­க­வும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆசி­ரி­யர்­க­ளி­டம் நேர்­முக ஆலோ­சனை பெற­வும் அவர்க­ளுக்கு வாய்ப்­பைத் தருகிறது," என்று அமைச்­சும் கழ­க­மும் கூறின.

உடல்­ந­ல­மில்­லாத மாண­வர்­கள், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் தனி­மை­யில் இருப்­ப­வர்­கள் தேர்வு முடி­வு­க­ளைப் பெற நேரில் செல்லக் ­கூ­டாது என்று கூறப்­பட்­டது.

அவர்­கள் இணை­யத்­த­ளம் வழி­யாக தேர்வு முடி­வு­களை அறிந்து­கொள்­ள­லாம்.

சுகா­தார அமைச்­சின் சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை பெற்­ற­வர்­கள், வரும் 23ஆம் தேதி அன்று விரை­வுக் கிரு­மிப் பரி­சோ­த­னை­யைச் செய்­தபின்னர் தொற்­றில்லை எனத் தெரிந்தால், நேரில் சென்று முடிவு ­க­ளைப் பெற்­றுக் கொள்­ள­லாம்.