சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்கள் சந்திப்பு

சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்கள் சந்திப்பு

1 mins read
0fe41824-98c0-49ee-ba1b-bbf72f31a324
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் நேற்று சந்தித்தனர். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது பற்றிய பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை திரு ஈஸ்வரன் சுட்டினார்.படம்: ஃபேஸ்புக்/ எஸ். ஈஸ்வரன் -

சிங்­கப்­பூர் இந்­திய அமைச்­சர்­கள் இரு நா­டுகளுக்கிடையே விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு­வது பற்றி கலந்­து­ரை­யாடியுள்­ள­னர்.

புளூம்­பெர்க் புதி­ய பொரு­ளி­யல் கருத்­த­ரங்­குக்­காக சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­தி­ருக்­கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர், போக்­குவ­ரத்து அமைச்­சர் திரு எஸ். ஈஸ்­வ­ரனை நேற்­றுக் காலை அது குறித்து சந்­தித்­துப் பேசி­னார்.

சந்­திப்பு குறித்து தமது ஃபேஸ்­புக் தளத்­தில் பதி­விட்ட திரு ஈஸ்­வ­ரன், இரண்டு பேரும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.