'5ஜி' நிபுணர்களை உருவாக்குவதில் துரித முன்னேற்றம் உள்ளது

'5ஜி' நிபுணர்களை உருவாக்குவதில் துரித முன்னேற்றம் உள்ளது

1 mins read
3498dca3-64bb-4fa7-b354-c6020956dae0
-

நாட்­டின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலுக்கு முக்­கிய அம்­ச­மா­கக் கரு­தப்­படும் '5ஜி' திறன்­களை, வளர்க்க வேண்­டும் என்ற தேசிய திட்­டத்­தின் கீழ் 3,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் பயிற்சி பெற்­றுள்­ள­தாக தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று தெரி­வித்­தார்.

இது எதிர்­பார்த்­த­தை­விட துரி­த­மாக ஏற்­பட்ட முன்­னேற்­றம் என்­றார் அவர். இதற்கு 12 உயர் கல்வி நிலை­யங்­கள் மற்­றும் தொழில்­துறைப் பங்­கா­ளி­க­ளின் ஒருங்­கிணைந்த முயற்­சியே கார­ணம் என்­றார்.

2023ஆம் ஆண்­டுக்­குள் 5,000 '5ஜி' நிபு­ணர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்­திட வேண்­டும் என்ற திட்­டத்தை அர­சாங்­கம் கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் அறி­வித்­தது.

மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தில் '5ஜி', செயற்கை நுண்­ண­றிவு போன்ற தொழில்­நுட்­பங்­கள் முக்­கிய அம்­சங்­கள் என்று நேற்று சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி நிகழ்ச்சி ஒன்­றில் திரு­வாட்டி டியோ பேசி­யி­ருந்­தார்.

'5ஜி' கட்­ட­மைப்பு 2025ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூர் முழு­வதும் பயன்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், '5ஜி' தீர்­வு­க­ளுக்­கான முன்­னோட்­டத் திட்­டங்­கள் பல­வற்றை தனி­யார், பொதுத் துறை­யி­னர் தொடங்­கி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, '5ஜி'யில் பயிற்சி பெற்­றுள்ள 3,000 உள்­ளூர்­வா­சி­களால் மேலும் துடிப்­பு­மிக்க ஓர் '5ஜி' கட்­ட­மைப்பை உரு­வாக்­கித் தர முடி­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் அமைச்­சர் டியோ.