தர்மன்: அரசாங்க, வர்த்தக ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும்

தர்மன்: அரசாங்க, வர்த்தக ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும்

1 mins read
f85357bc-3ce1-42e6-aaef-60e152531b7d
-

அடுத்த கொள்­ளை­நோய்க்கு உல­கைத் தயார்ப்­ப­டுத்த, அர­சாங்­கத்­திற்­கும் வர்த்­த­கத் துறைக்­கும் மேலும் வலு­வான ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­வ­தாக மூத்த அமைச்­சரும் சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­துள்­ளார்.

ஆய்வு, உற்­பத்தி, விநி­யோ­கத் திறனை நாடு­கள் மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர். கொள்­ளை­நோய் தொடர்­பில் தனி­யார் துறை தனித்து இயங்கி தேவை­யா­னதை வழங்க முடி­யாத நிலை­யில், பொதுத்­துறை நிதி­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இதன் மூலம் ஆய்வு, உற்­பத்தி வச­தி­களை முன்­த­யா­ரிப்­பாக உரு­வாக்­கி­வி­ட­லாம் என்­றார் அவர்.

"முன்­ன­தா­கவே தயார்ப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு ஆகும் செலவு, தயார்ப்­ப­டுத்­தாத நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் எல்­லை­யற்­றது. கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து கற்­றுக்­கொண்ட பாடம் அதுவே," என்று 'புளூம்­பெர்க் நியூ எக­னாமி' கருத்­த­ரங்­கில் திரு தர்­மன் குறிப்­பிட்­டார். எனவே, அனைத்­து­லக ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அத்­த­கைய ஒத்­து­ழைப்பு இல்­லாத சூழ­லு­டன் ஒப்­பி­டு­கை­யில் நேரும் செலவு கணக்­கில் அடங்கா என்­றும் அவர் கூறி­னார்.