தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'போன்ஸி' திட்டம் வழி $700,000 மோசடி: இந்தியருக்குச் சிறை

1 mins read
f206986b-6655-4a27-9495-1c56436c91d7
-

'போன்ஸி' திட்­டத்­தைப் பயன்­படுத்தி 54 வயது ஜெயா ரெத்­தி­ன­சாமி காந்தி, 22 பேரி­டம் இருந்து மொத்­தம் $700,000ஐ மோசடி செய்­துள்­ளார். 2016ஆம் ஆண்­டுக்­கும் 2018ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்த 22 பேரும் ஜெயாவை நம்­பிப் பணம் கொடுத்­தி­ருந்­த­னர்.

விமா­னப் பய­ணச்­சீட்­டு­கள், அந்­நி­யச் செலா­வணி நாண­யங்­கள் போன்­ற­வற்றை ஜெயா தங்­களுக்கு வழங்­கு­வார் என்ற நம்­பிக்­கை­யில் அந்த 22 பேரும் இவ்­வாறு செய்­தி­ருந்­த­னர்.

குற்­றம் புரிந்த கால­கட்­டத்­தில், சிங்­கப்­பூ­ர­ரான ஜெயா, பயண நிறு­வ­னம் அல்­லது நாணய பரி­வர்த்­தனை வர்த்­த­கம் நடத்­தும் உரி­மம் ஏதும் வைத்­தி­ருக்­க­வில்லை.

ஜெயா­வுக்கு நேற்று ஈராண்­டுக்கு மேலான சிறைத் தண்­டனை­யும் $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. ஷோப­கு­ண­சே­க­ரன் என்­ப­வர் சார்­பில் கடன் நிறு­வ­னம் ஒன்­றி­ட­மி­ருந்து 2014ல் ஜெயா $300,000 கடன் வாங்­கினார். பணத்தை அவ­ரின் காத­ல­ரி­டம் கொடுத்­தார். இருப்­பி­னும், அந்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாய­மா­னார்.

இத­னால் நிதி நெருக்­க­டி­யில் சிக்­கி­னார் ஜெயா. 2013ல் தொடங்­கிய தனது பயண நிறு­வ­னத்தை 2014ஆம் ஆண்­டில் மூடி­னார். இருப்­பி­னும், அதில் பெற்ற அனு­ப­வத்­தைப் பயன்­ப­டுத்தி, பல­ரை­யும் ஏமாற்­றித் தனது கட­னைக் கட்டி முடித்­தார்.

மோச­டிக்கு ஆளா­ன­வர்­கள் புகார் அளித்­ததை அடுத்து ஜூலை 2017ல் போலி­சார் தங்­களின் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னர். விசா­ர­ணை­யில் இருந்த நிலை­யி­லும், ஜெயா தனது மோச­டித் திட்­டத்­தைத் தொடர்ந்­தார்.

தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கு­வ­தற்கு அடுத்த மாதம் 29ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் ஜெயா சர­ண­டை­ய­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.