500,000 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூரிடம் திருப்பிக் கொடுத்துள்ள ஆஸ்திரேலியா

கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் பகிர்ந்­து­ கொள்­ளும் ஏற்­பாட்­டின்­கீழ் ஏறத்­தாழ 500,000 ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மருந்­து­களை

சிங்­கப்­பூ­ரி­டம் ஆஸ்­தி­ரே­லியா திருப்­பிக் கொடுத்­துள்­ளது.

இந்­தத் தடுப்­பூசி மருந்­து­க­ளைக் கடந்த செப்­டம்­பர் மாதம் 2ஆம் தேதி­யன்று ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சிங்­கப்­பூர் அனுப்பி வைத்­தி­ருந்­தது.

அப்­போது கொவிட்-19 டெல்டா வகை கிரு­மிப் பர­வ­லால் ஆஸ்­தி­ரே­லியா வெகு­வா­கப் பாதிக்­கப்­

பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரு­டன் செய்­து­கொண்ட தடுப்­பூசி பகிர்ந்­து­கொள்­ளும் திட்­டத்­தின் மூலம் செப்­டம்­பர் மாதம் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து தடுப்­பூசி போடும் திட்­டத்தை விரை­வு­ப­டுத்­த­வும் 12 வய­துக்­கும் 15 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­கும் தடுப்­பூசி போடும் திட்­டத்தை விரி­வு­ப­டுத்­த­வும் முடி­யும் என்­றும் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தடுப்­பூசி போடும் திட்­டத்­துக்கு உத­வு­வ­தில் மகிழ்ச்சி அடை­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார். தற்­போது ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடும் திட்­டம் தொடர்­வ­தா­க­வும் சிங்­கப்­பூ­ருக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­டுள்ள தடுப்­பூசி மருந்­து­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கை­யில் 21 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

மக்­கள்­தொ­கை­யில் 94 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்­தத் தடுப்­பூசி பகிர்ந்­து­கொள்­ளும் திட்­டம் சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடை­யி­லான வலு­வான நல்­லு­ற­வைப் பறை­சாற்று­ வ­தாக வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

"கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது இரு நாடு­களும்

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை

முறைப்­ப­டுத்­தப்­பட்ட சிறந்த

அணு­கு­மு­றை­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டன. இரு­நா­டு­க­ளுக்கு இடை­யி­லான விநி­யோ­கங்­கள் தொடர்­வ­தும் உறுதி செய்­யப்­பட்­டது. அத்­து­டன், பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்­லாத இரு­வ­ழிப் பய­ணத்தை மீண்­டும் தொடங்க இரு­நா­டு­களும் இணைந்து செயல்­பட்­டன," என்று அமைச்சு கூறி­யது.

நாளை மறு­நாள் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தட ஏற்­பாட்­டின்­கீழ் சுற்றுப்­ ப­ய­ணி­கள், ஊழி­யர்­கள், மாண­வர்­கள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்­டோ­ரியா ஆகிய

மாநி­லங்­க­ளுக்­குப் பய­ணம் செய்­ய­லாம். அவர்­கள் தனி­மைப்­ப­டுத்தப்பட மாட்­டார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!