நீரிழிவு நோய்க்கு எதிராகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட எதிர்நடவடிக்கை
களையும் மீறி 2019ஆம்
ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரில் அந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
அந்தக் காலகட்டத்தில்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 9.5 விழுக்காடாகப் பதிவானது. 2017ஆம் ஆண்டில் அது 8.8 விழுக்காடாக இருந்தது.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு அறிக்கையில்
இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருந்து வருவதை அறிக்கை காட்டுகிறது.
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து
வந்துள்ளதாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கிட்டத்தட்ட 35.5 விழுக்காட்டினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர்.
அதே காலகட்டத்தில் பத்தில் நால்வருக்கு உயர் ரத்தக் கொழுப்பு இருந்தது.
2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்தத்தாலும் உயர் ரத்தக் கொழுப்பாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிக்கை காட்டுகிறது.

