மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மையத்தில் நேற்று தொடங்கிய 'ரெஸ்டராண்ட் ஏஷியா 2021' எனும் உணவு, பானக் கருத்தரங்கு, வர்த்தக கண்காட்சி சிங்கப்பூரின் பொருளியல் மீட்சிக்கு மற்றொரு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொவிட்-19 தடைகள் தளர்த்தப்பட்டதிலிருந்து இன்றுவரை இங்கு நடைபெற்ற மிகப்பெரிய 'மைஸ்' (கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள்) நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 1,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் மில்கென் ஏஷியா கழகத்தின் உச்சநிலைக் கூட்டம், புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு என மேலும் இரு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளவர்கள் பங்கேற்கும் பெரிய வர்த்தக மாநாடுகளின் வரிசையில் இது முதல் நிகழ்ச்சியாக அமைகிறது.
நேற்று நடைபெற்ற புளூம்பெர்க் கருத்தரங்கில் சுமார் 300 அனைத்துலக வர்த்தக, அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று முடிவடைந்த மில்கென் ஏஷியா கழகத்தின் உச்சநிலைக் கூட்டத்தில் 200 பேர் வரையிலான வர்த்தக தொடர்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
மற்ற இரண்டு நிகழ்வுகளைப் போலல்லாமல், ரெஸ்டராண்ட் ஏஷியா 2021 நிகழ்வுக்கு முந்தைய பரிசோதனை எதுவும் தேவையில்லை.
ஏறக்குறைய இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள உணவு, பான நிகழ்வு நாளை வரை நடைபெறும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைத்து பங்கேற்
பாளர்களின் முன்பதிவு மற்றும் ஐந்து வர்த்தக தொடர்பு மண்டலங்களில் ஒன்றில் அவர்கள் செலவிடக்கூடிய நேர வரம்புகளும் அடங்கும்.
ஒவ்வொரு காலை மற்றும் பிற்
பகல் அமர்வுகளுக்கும் சுமார் 500 பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்
படுகிறார்கள். மேலும் நிகழ்வு அமர்வுகளுக்கு இடையில் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
தொடக்க விழாவில், சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் தலைவர் திரு ஆண்ட்ரூ குவான், "பாதிக்கப்பட்ட உணவு, பானத் தொழில்துறையை மீண்டும் நிலைபெறச் செய்ய, எட்டு பேர் உணவு உண்ண அனுமதிக்கவேண்டும்," என அழைப்பு விடுத்தார்.
"நான் இந்த ஒரு பணிவான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதாவது - தடுப்பூசி போடப்பட்ட மற்றும் மருத்துவ ரீதியாக விலக்கு அளிக்கப்பட்ட அனைவரும் எட்டு பேராக உணவளிக்க அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை வியாபார வேகத்தைக் குறைக்காமல் சற்று அதிகப்படுத்த உதவியாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
"சிங்கப்பூர் உணவகச் சங்கம்மற்றும் எங்கள் உறுப்பினர்கள், ஒரு தொழில்துறையாக, தடுப்பூசி போட்டவர்களா என்பதை உறுதி செய்வதிலும் காண்காணிப்பதிலும் எங்கள் பங்கை ஆற்ற உறுதி
யளிக்கிறோம்."
தற்போது, உணவு, பானக் கடைகளில் உணவருந்துவதற்கான குழு அளவு வரம்பு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நபர்கள் அல்லது ஒரே வீட்டில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஐந்து நபர்கள்.
உணவு, பானத் துறை மீட்
படைந்து வரும் இவ்வேளையில், நேற்றைய உணவு, பானக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினரான வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தொழில்முனைவோருக்கான வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டார்.
"ஒவ்வோர் ஆண்டும், ஐந்தில் ஒரு உணவு, பானக் கடை மாற்றப்படுவதைக் காண்கிறோம், மேலும் இரண்டு உணவு, பான வர்த்தகங்கள் நான்கு ஆண்டு களுக்கு மேல் செயல்பட்டதில்லை. மேலும் அதிகமானோர் இந்தத் துறையில் நுழைந்தாலும் கூட, உணவு, பானத் துறை ஒரு சவாலாக உள்ளது," என்று அவர் கூறினார்.
"புதிய தொழில்முனைவோர் தங்கள் உணவு, பான பயணத்தைத் தொடங்கும் முன் கவனமாக திட்டமிட வேண்டியது மிகவும் அவசியம்" என்று திரு கான் மேலும் கூறினார்.
'ரெஸ்டராண்ட் ஏஷியா 2021' கருத்தரங்கு: நாளொன்றுக்கு 1,000 பேர் வருவர் என எதிர்பார்ப்பு

