பிஎஸ்பிக்கு எதிராக வழக்கு
கட்சியிலிருந்து தம்மை நீக்கியதற்கு எதிராக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) மீது அதன் முன்னாள்
வேட்பாளர் வழக்குத் தொடுத்துள்ளார். டான் செங் போக்
தோற்றுவித்த அக்கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்
தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் கலா மாணிக்கம், 54, போட்டியிட்டார். தற்போது அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் 2020 டிசம்பரில் தம்மைக் கட்சியிலிருந்து நீக்கியது தவறு என கட்சி அறிவிக்கவேண்டும் என கோரியுள்ளார். அத்துடன் தேர்தல் செலவுக்காகத் தாம் அளித்த $10,000ஐ பிஎஸ்பி திருப்பித் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
கொவிட்-19 பொய்க்கு அபராதம்
பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காகப் பிடிபட்ட போ லியாங் சாய், 43, எனப்படும் ஆடவரை துணை போலிஸ் படை அதிகாரி ஈஸ்வரன் கிருஷ்ணன் கையும் களவுமாகப் பிடித்தார். ஆனால், தம்மைப் பற்றிய விவரங்களை போ தர மறுத்ததுடன் தமக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக அதிகாரியிடம் பொய் கூறினார். அவர் ஒத்துழைக்க மறுத்த தால் போலிசை வரவழைத்தார் ஈஸ்வரன். கடந்த ஜூலை 3ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. பொதுச் சேவை ஊழியரைத் தொல்லை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போவுக்கு நேற்று நீதிமன்றத்தில் $1,500 அபரா தம் விதிக்கப்பட்டது.

