முப்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஈப்பிடிப்பான் குருவி

முப்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஈப்பிடிப்பான் குருவி

1 mins read
f359db6d-afe6-49d7-a3f1-9415b7554c86
சாம்பல் கோடுள்ள ஈப்பிடிப்பான் குருவிகள், பிலிப்பீன்ஸ், கிழக்கு இந்தோனீசியா ஆகியவை வழியாக இடம்பெயரும் பறவைகள் ஆகும். படம்: டெஸ்மண்ட் யாப் -

கடை­சி­யாக சுமார் 30 ஆண்­டு­ க­ளுக்கு முன்பு இங்கு காணப்­பட்ட சாம்­பல் கோடுள்ள ஈப்­பி­டிப்­பான் குருவி (grey-streaked flycatcher) இம்­மா­தம் 9ஆம் தேதி மீண்­டும் இங்கு தென்­பட்­டுள்­ளது.

செம்­ப­வாங்­கில் காணப்­பட்ட ஒற்­றைக் குருவியை இயற்கை ஆர்வலர் ஒருவர் புகைப்­ப­டம் எடுத்தார்.

அந்த வகை சாம்­பல் கோடுள்ள ஈப்­பி­டிப்­பான் குருவி முதன்­மு­றை­யாக கடந்த 1991ஆம் ஆண்டு இங்­கு காணப்­பட்­டது. இப்­போது இரண்­டா­வது முறை­யாக அது சிங்­கப்­பூ­ரில் தென்­பட்­டுள்­ளது.

மெல்­லிய சிற­கு­கள் கொண்ட அந்­தக் குருவி, வழக்­க­மாக தென்­கி­ழக்­கா­சி­யா­வில் காணப் ­ப­டு­வ­தில்லை என்று 'பர்ட்­லைஃப் இண்­டர்­நே­ஷ­னல்' எனும் அமைப்­பைச் சேர்ந்த டாக்­டர் யோங் டிங் லி கூறி­னார்.

சாம்­பல் கோடுள்ள ஈப்­பி­டிப்­பான் குரு­வி­கள், பிலிப்­பீன்ஸ், கிழக்கு இந்­தோ­னீ­சியா ஆகி­யவை வழி­யாக இடம்பெய­ரும் பற­வை­கள் என்று அவர் கூறி­னார்.

அவை, பசி­ஃபிக் கடல் பாதை­யைப் பின்­பற்றி வரு­வ­தாக டாக்­டர் யோங் தெரி­வித்­தார்.

ஒற்­றைக் குருவி வழி தெரி­யா­மல் இங்கு வந்து சேர்ந்­தி­ருக்­க­லாம் என்று அவர் சொன்­னார்.