வளர்பிறை மகளிர் வட்டத்தின் கருத்தரங்கு

வளர்பிறை மகளிர் வட்டத்தின் கருத்தரங்கு

1 mins read
ad220e54-09cf-49d7-b929-49b7fa312307
வளர்­பிறை மக­ளிர் வட்­டம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட பேச்சாளர்களில் சிலர். படம்: அ. முஹம்மது பிலால் -

முஸ்­லிம் லீக் (சிங்­கப்­பூர்) சமூக நல்­லி­ணக்க சேவை அமைப்­பின் மக­ளிர் பிரி­வான வளர்­பிறை மக­ளிர் வட்­டத்­தின் இரண்­டாம் ஆண்­டின் தொடக்­க­விழா இம்­மா­தம் 14ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது.

"குன்­றென நிமிர்ந்து நில்" எனும் கருப்­பொ­ரு­ளைக் கொண்ட கருத்­த­ரங்­கம் நிகழ்ச்சி ­யின் ஒரு பகு­தி­யாக நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக் கழ­கத்­தைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் சித்ரா சங்­க­ரன், இந்த கருத்­த­ரங்­கிற்கு தலைமை ஏற்­ற­து­டன், நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ரா­க­வும் பங்­கேற்று சிறப்­புரை ஆற்­றி­னார்.

வளர்­பிறை மக­ளிர் வட்­டத்­தின் தலை­வர் மஹ்­ஜ­பீன், துணைத்­த­லை­வர்­கள் மிஸ்­காத் பேகம், நபிலா நஸ்­ரின், உத­விச்­ செ­ய­லா­ளர் நர்­கீஸ் பானு, துணைப்­ பொ­ரு­ளா­ளர் நஸ்­ரின் பானு ஆகி­யோர் கருத்தரங் கில் சிறப்­புக் கட்­டு­ரை­களைப் படைத்­த­னர்.

முயிஸ் அமைப்பு வழங்­கிய 2021 ஆண்­டுக்­கான 'ஜாஸா பக்தி' விரு­தைப் பெற்ற இந்­திய முஸ்­லிம் பேர­வைத் தலை­வ­ரும், முஸ்­லிம் லீக் (சிங்­கப்­பூர்) அமைப்பின் பொதுச் செய­லா­ள­ரு­மான முஹம்­மது கெள­ஸைப் பாராட்­டும் அங்­க­மும் நடை­பெற்­றது.

ஸூம் மற்­றும் நேரலை மூலம் உள்­ளூ­ரை­யும் வெளி­நா­டு­க­ளை­யும் சேர்ந்த பார்­வை­யா­ளர்­கள் நிகழ்ச்சி­யில் இணைந்­தி­ருந்­த­னர்.