கொரோனா: உடல்நலன், மனநலனைக் காக்கவேண்டிய கட்டாயம்

முரசொலி

கொவிட்-19 தொற்று உலக மக்­கள் செயல்­படும் பாணி­யைத் தலை­கீ­ழாக மாற்­றி­விட்­டது. வீட்­டில் இருந்தே வேலை, வெளியே சென்று உடற்­ப­யிற்சி உள்­ளிட்ட பல­வற்­றி­லும் கலந்­து­கொண்டு சுறு­சு­றுப் பாக ஒவ்­வொரு நாளை­யும் கழிக்க இய­லாத நிலை, எல்­லாம் சேர்ந்து மொத்­தத்­தில் மனி­தர்­க­ளி­டத்­தில் சோம்­பே­றித்­த­னம் அதி­க­மாக கொரோனா வழிகோலி இருக்­கிறது.

வாழ்க்­கை­யில் இது­வரை கண்­டி­ராத கொரோனா பிரச்­சி­னை­களை, ஒருநாள், இரு நாட்­கள் அல்ல, ஆண்­டுக்கணக்­கில் சந்­திக்க வேண்­டியநிலையில், மக்­களின் உடல்நலப் பாதிப்பு குறிப்­பிடத்தக்க அளவுக்­குக் கூடி இருக்­கிறது.

உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் மட்­டு­மின்றி அதை­விடப் பெரி­தாக மனி­தர்­க­ளின் மன­ந­ல­மும் பெரும் சவா­லுக்கு இலக்­காகி உள்­ளது.

சமூ­கத்­தில் சுதந்­தி­ர­மாக கலந்­து­ற­வாட முடித நிலை, வேலை தொடர்­பான அச்­சம், வரு­வாய் குறைவு, பிள்­ளை­களைப் படிக்கவைக்க வேண்­டிய தேவை, பெற்­றோரைக் கவ­னித்­துக்கொள்ள வேண்டிய அவ­சி­யம் எல்லாம் மன­த­ள­வில் மக்­க­ளி­டம் பெரும் பாதிப்­பை­யும் உளைச்­ச­லை­யும் ஏற்­படுத்தி இருக்­கின்­றன. கொரோனா கார­ண­மாக உடல்­ந­லப் பாதிப்பைவிட மன­ந­லப் பாதிப்பு அதிக அச்சத்தைக் கிளப்புவதாக இருக்­கிறது.

ஆக்­க­க­ர­மான, நம்­பிக்கைமிக்க மனநிலை­யைக் கொண்டவர்­கள்கூட மனச்சோர்வு அடைந்து, மனதளவில் உடைந்­து­போய் இருக்­கி­றார்­கள். சமூ­கத்­தில் எல்லா நிலை­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள் இவர்­களில் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூர் மக்­கள் உல­கி­லேயே ஆக அதிக ஆயுள் உள்­ள­வர்­கள். உடல் நலன், மன­ந­லன்மிக்­க­வர்­கள். இருந்தாலும் அவர்களும் இதற்கு விதி­விலக்கு அல்ல. சிங்­கப்­பூர் மக்­க­ளின் உடல், மன­நலன் குறைந்து இருக்­கிறது என்ற ஒரு தக­வல் வெளிகி இருப்­பது மனக் கவ­லையை அதிகப்படுத்து வதாக இருக்­கிறது.

தேசிய மக்­கள் தொகை சுகா­தார ஆய்வு முடிவு­கள் அண்­மை­யில் வெளி­யிடப்­பட்­டன. மக்களிடம் நெடு­நாள் நீடிக்­கக்­கூ­டிய நோய்­கள் கூடியுள்ளன. நல­மற்ற வாழ்க்கை பாணி அதி­க­மாகி இருக்­கிறது.

உயர் ரத்த அழுத்த நோல் பாதிக்­கப்­ப­ட்டுள்ள மக்­க­ளின் எண்­ணிக்கை இரண்டே ஆண்­டு­களில் பாதி அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. 2017ல் 24.2% ஆக இருந்த இந்த அளவு, சென்ற ஆண்டு மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த எட்டு மாத காலத்­தில் 35.5% ஆகக் கூடி இருப்­ப­தாக அந்­தக் கால கட்­டத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

அதே காலத்­தில் நீரி­ழிவு நோய் விகி­தம் 8.8% லிருந்து 9.5% ஆகக் கூடி­விட்­டது. இந்த நோய்க்கு எதி­ராக கடந்த ஐந்து ஆண்டு கால­மாக சிங்­கப்­பூ­ரில் பெரும் முயற்­சி­கள் இடை­வி­டாது எடுக்­கப்­பட்­டு­வ­ரும் போதி­லும் இந்த நோய் ஏறு­மு­க­மாக இருக்­கிறது என்­பது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கது.

அள­வுக்கு அதி­க­மாக மக்­கள் குடிக்­கி­றார்­கள். 8.8% ஆக இருந்த இந்த அளவு 10.5% ஆக அதி­கரித்து உள்­ளது. சிக­ரெட் புகைப்­ப­தற்­கான குறைந்­த­பட்ச வயது அதி­க­மாக்­கப்­பட்­ட­தால் புகைப்­போர் அளவு 11.8%லிருந்து 1.1% ஆகக் குறைந்­துள்­ளது.

என்­றா­லும் இதை நினைத்து மகிழ்ச்சி அடைய முடித அளவுக்கு இதர உடல் நலப்­பி­ரச்­சி­னை­கள் அதி­க­ரித்து உள்­ளன என்­பதே உண்மை.

ஒரு­வ­ரின் உடல் நல­னுக்கு அவ­ரின் உணவு பாணி முக்­கி­ய­மானது. உட­லில் ரத்த அழுத்­தம் கூடு­வ­தற்கு சோடி­யம் எனப்­படும் உப்பை உணவில் அதி­கம் சேர்த்­துக்­கொள்­வது ஒரு கார­ணம்.

ரத்த அழுத்தம், அதிக உப்புப் பிரச்­சினை கவலை தரும் அள­வுக்கு இருக்­கிறது. ஒரு­வர் அன்­றாடம் எவ்­வ­ளவு உப்பை சாப்­பாட்­டில் சேர்த்­துக்கொள்­ள­லாம் என்­பதை உலக சுகா­தார நிறு­வ­னம் வரை­யறுத்து பரிந்­து­ரைத்­துள்­ளது. ஆனால் சிங்­கப்­பூ­ரில் உப்பு பய­னீடு அந்த அள­வை­விட அதி­க­மாக உள்ளது.

ஆகைல் இந்­தப் பிரச்­சி­னை­யில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் அள­வுக்­குத் தேசிய அள­வில் உத்­தி­கள், செயல்­திட்­டங்­கள் தேவை என்ற ஒரு நிலை அவ­சி­ய­மாகி இருக்­கிறது.

சர்க்­க­ரையை அதி­க­மாக சேர்த்­துக்கொள்­ளக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்கு மேற்­கொள்ளப்­படும் அள­வுக்கு உப்­புக்கு எதி­ராகவும் கவ­னம் செலுத்­தப்­ப­ட­வேண்­டும்.

நீரி­ழி­வுக்­குச் சர்க்­கரை, அதிக ரத்த அழுத்­தத்­திற்கு உப்பு முக்­கிய காரணம் என்­பதை மக்­கள் உணர்ந்­து­கொள்­ளு­மாறு செய்ய வேண்­டும்; உப்­பைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்தி, அதைக் குறைத்­துக்­கொள்­ளும்­படி மக்­களுக்கு ஊக்­க­மூட்ட அதி­கா­ரி­கள் முயற்­சி­களை முடுக்­கி­விடுகிறார்­கள்.

தேசிய அள­வில் இயக்­கம் ஒன்­றைத் தொடங்க திட்­ட­மி­டு­கி­றார்­கள் என்­பது இதில் குறிப்­பி­டத்­தக்க ஒன்று. இவற்­றுக்­கெல்­லாம் கொரோனா தொற்று முக்­கிய கார­ணம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள உடல்நல மாற்­றங்­கள் நீண்ட காலப்­போக்­கில் எதிரொலிக்­கும் என்­ப­தற்­குத் தகுந்த கார­ணங்­கள் இல்­லா­மல் இல்லை. இதற்­கான ஓர் அடைளமாகவே அண்மைய ஆய்வு முடி­வு­க­ளைப் பார்க்­க­லாம்.

எது எப்­படி இருந்­தா­லும் மக்­கள் தங்­கள் உடல், மனநல­னைப் பொறுத்தவரை இப்­போதே விழித்­துக் கொள்ள வேண்­டும். கொரோனா ஒருநாள் போய்­வி­டும். ஆனால் அதன் கார­ண­மாக ஏற்­பட்ட பாதிப்பு­கள் நமக்குப் பெரிய அளவில் நெடு­நாள் சுமை கிவிடக் கூடாது.

கொவிட்-19 கார­ண­மாக வாழ்க்கைப் பாணி மாறி இருப்­ப­தால் உடல் உழைப்பு குறைந்து இருப்­ப­தால் உடல் பரு­மன் கூடி அத­னால் பல நோய்­கள் உடலில் நெடு­நாள் குடி­யி­ருக்­கும் நிலை வர­லாம். இப்­ப­டிப்­பட்ட ஒரு பாத­கச் சூழலை சிங்­கப்­பூ­ரர்­கள் தவிர்த்­துக் கொள்­ள­வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் உடல், மன­நலனைத் தற்­காத்­துக்­கொள்ள பக்­கு­வ­மான முறை­யில் முழுமை ன அணு­கு­மு­றையை அவர்­கள் கைகொள்ள வேண்­டும்.

வாழ்­வில் எவ்­வ­ளவு சிர­மங்­கள், மிரட்டல்­கள் வந்­தா­லும் அவற்­றைச் சமா­ளித்து வென்­று­விடவேண்­டும் என்ற மன­உ­றுதி முக்­கி­யம். அதே­போல, உடல்­ந­ல­னில் அவர்­கள் மிக முக்­கி­ய­மாக தங்­கள் சாப்­பாட்­டில் கவ­னம் செலுத்த வேண்­டும். உப்பைக் குறைக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ஒரு வழியாக வென்­று­விட்ட நிலையில், உடல், மன­நலன் போராட்டத்­தில் நாம் தோற்றுவிட்­டால் அது முழுமை யான வெற்றியாக இராது.

ஆகையால் கொரோனாவை வீழ்த்துவதோடு மட்டுமின்றி அதனால் ஏற்படக்கூடிய உடல், மனநல மிரட்டல்களையும் நாம் வீழ்த்த வேண்டும். இதைச் சாதிப்பது ஒவ்­வொ­ரு­வ­ரின் பொறுப்பு, கடமை, அவ­சி­யம் என்­பதை மக்கள் மறந்­து­விடக்­கூ­டாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!