அதிக மீள்திறனுடன் சிங்கப்பூர்

1 mins read
96ed2402-cfc0-4cdd-81d4-e865abae4719
உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்த மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் சமூ­கம் கொவிட்-19க்கு எதி­ராக மேலும் மீள்­தி­றனைப் பெற்று வரு­கிறது. நட­மாட்­டக் கட்டுப்­பா­டு­கள் தளர்வதால் தொற்றுக் கூட­வில்லை. மருத்­துவ மனை­க­ளி­லும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறைந்துள்ளது.

தீவிர தடுப்பூசி இயக்கம் காரண மாக, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­ய­வர்­கள் தொற்றுக்குப் பாதிக்­கப்­ப­டு­வ­தும் குறைந்துள்ள தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அவர், சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யின்­கீழ் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அண்­மைய வாரங்­களில் குறைந்து உள்ளது என்றார். அக்­டோ­பர் முழு­ வ­தும் இந்த எண்­ணிக்கை ஏறத்­தாழ 20,000 ஆக இருந்­தது. அக்­டோ­பர் 29ஆம் தேதி 26,386 ஆகக் கூடி­யது. ஆனால் அதற்­குப் பிறகு நவம்­பர் 7ல் 20,000 ஆக­வும் இப்­போது ஏறத்­தாழ 15,000 ஆக­வும் அது குறைந்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் கடந்த சில வாரங்­களில் மக்­கள் நட­மாட்டம் கூடி­னா­லும் கொவிட்-19 தொற்று உள்ள ஒரு­வ­ரி­டம் இருந்து கிருமி பர­வக்­கூ­டிய சரா­சரி மக்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக உள்ளது. கடு­மை­யான நோய்ப் பாதிப்பு­களும் குறைந்து வரு­கின்­றன என்றாரவர்.