லாரன்ஸ் வோங்: டிசம்பர் முடிவில்தான் அடுத்த பரிசீலனை

லாரன்ஸ் வோங்: டிசம்பர் முடிவில்தான் அடுத்த பரிசீலனை

1 mins read
c5619e7a-8e1c-4aa6-af2c-9d7a02f196a3
-

சிங்­கப்­பூர் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை அடுத்த மாதம் மேலும் தளர்த்­து­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அநே­க­மாக இல்லை என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

எல்­லாம் சரி­யாக நடந்­தால் டிசம்­பர் மாத முடி­வில்­தான் அடுத்த பரி­சீ­லனை இடம்­பெ­றும் என்று அவர் கூறி­னார்.

கொரோனா கிரு­மியைச் சமாளிப்­ப­தற்கு அர­சாங்­கம் எடுக்­கும் படிப்­ப­டி­யான அணு­கு­மு­றை­யின் ஒரு பகு­தி­யாக இது இடம்­பெ­று­கிறது என்று நேற்று கொவிட்-19 அமைச்­சு­கள்நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

வேலை­யிடக் கட்­டுப்­பா­டு­கள், கவர்ச்சி இடங்­க­ளுக்­கான அனுமதி வரம்பு போன்ற இதர துறை­களில் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்கு கோரிக்­கை­கள் வந்­துள்­ளன.

இருந்­தா­லும் சிங்­கப்­பூர் இப்­போதைக்கு ஒரு கட்­டுப்­பாட்டை மட்­டும் தளர்த்­து­வ­தா­கக் கூறி­னார்.

அடுத்த திங்­கட்­கி­ழமை முதல் ஐந்து பேர் வரை ஒன்­று­கூ­ட­லாம் என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

இது தவிர மற்­ற­வற்றை எல்­லாம் இப்­போ­தைக்கு தளர்த்­தப்போவ தில்லை என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

அடுத்த சில வாரங்­களில் சூழ்­நி­லையைக் கண்­கா­ணித்து, ஒட்­டு­ மொத்த சூழ்­நிலை தொடர்ந்து சீராக இருந்­தால் அடுத்­தக் கட்ட நட­வ­டிக்­கை­களை அநே­க­மாக டிசம்­பர் மாத முடி­வில் பரி­சீ­லிக்­க­லாம் என்­று திரு வோங் கூறினார்.