தேக்கா நிலைய உணவங்காடிக் கடைகளில் இம்மாத இறுதிக்குள் ஐவர் அமர்ந்து உண்ண ஏற்பாடு உணவகங்களுக்குத் திரும்பும் மக்கள்

3 mins read
653bd22f-62fd-4bea-a363-32b4fec6b9eb
புதிய தளர்வுகள் நடப்புக்கு வந்ததை அடுத்து காயத்திரி உணவகத்தில் குடும்பமாகச் சென்று உண்டவர்களில் சிலர். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

நீண்ட நாட்­க­ளுக்­குப் பிறகு குடும்­ப­மாக உண­வ­கத்­துக்குச் ­சென்று உண்ண முடிந்­தது பல­ருக்கு மகிழ்ச்­சி­யைத் தந்­தது.

நேற்று ரேஸ் கோர்ஸ் சாலை­யில் உள்ள காயத்திரி உண­வ­கத்­திற்கு மதிய உணவு உண்ண தமது குடும்­பத்­தா­ரு­டன் வந்­தி­ருந்­தார் பொறி­யாளரான நித்யா சர­வ­ணன், 39. தமது கண­வர், பெற்­றோர், பிள்ளைகளுடன் அவர் வந்­தி­ருந்­தார்.

"எங்­கள் குடும்­பத்­தில் ஆறு பேர் என்­ப­தால் இரு மேசை­களில் அமர்ந்து உண்ணவேண்­டும். இருப்பினும் பல நாள் கழித்து குடும்­பத்­து­டன் ஒன்­றாக வெளியே கடை­ க­ளுக்கு வரு­வது மன­நி­றை­வைத் தந்­தது," என்­றார் திருமதி நித்யா.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்கொண்டோர் நேற்று முதல் அதி­க­பட்­சம் ஐவர் கொண்ட குழுக் களாக உண­வ­கங்­களில் அமர்ந்து உண­வ­ருந்­த­லாம் என்று சனிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் ஒரே குடும்­பத்­தி­ன­ராக இருக்க வேண்­டு­ம் என்ற அவ­சி­ய­மில்லை. மேலும், நேற்று முதல் ஐவர் வரை ஒன்­று­கூ­ட­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் உள்ள உண­வ­க உரிமையாளர்கள் பலர் மக்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் நண்­பர்­க­ளு­ட­னும் குடும்­பத்­து­ட­னும் வரு­வார்­கள் என்று எதிர்­பார்ப்பதாகக் கூறினர்.

காயத்­திரி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு மகேந்­தி­ரன், 32, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட போதும் உட­ன­டி­யாக மாற்­றம் தெரி­யாது என்­றார். நிலைமை மேம்­பட இன்­னும் பல காலம் ஆகும் என்­றார்.

லி‌‌‌ஷா எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் செய­லா­ளர் திரு ருத்­தி­ரா­பதி கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை வர­வேற்­றார்.

இனி திரு­மண நிகழ்­வு­களும் வெளி நிகழ்ச்­சி­க­ளுக்­கான 'கேட்­ட­ரிங்' உணவு விநி­யோ­க­மும் அதி­க­ரிக்­கும் என தாம் எதிர்ப்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார். எப்­ப­டி­யும் வர்த்­த­கங்கள் வழக்­க­நி­லையை அடைய குறைந்­தது 6-12 மாதங்­கள் எடுக்­கும் என்­றும் அவர் கரு­து­கி­றார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டம் பல நாடு­க­ளுக்கு விரி­வாக்­கப்­பட்­டா­லும் வெளி­நாட்­டுச் சுற்­றுப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அவ்­வ­ளவு விரை­வில் அதி­க­ரிக்­காது," என்­றும் திரு ருத்­தி­ரா­பதி குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்று அதி­க­ரிப்­பால் அண்மை கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளால் உண­வ­கங்­கள் அதிக பாதிப்­புக்கு உள்­ளா­யின.

ஏற்­கெ­னவே ஒரு முறை இரு­வர் மட்­டுமே அமர்ந்து உண்ண முடி­யும் என்று கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டது. பின்­னர் இம்­மா­தம் 10ம் தேதி முதல் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐந்து பேர் உண­வ­கத்­தில் உண்­ண­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டது. நேற்று கட்­டுப்­பா­டு­ கள் மேலும் தளர்த்­தப்­பட்­டன.

தேக்கா நிலை­யத்­தில் இன்­னும்

அனு­மதி இல்லை

இதற்­கி­டையே தேக்கா நிலை­யத்­தில் உள்ள உண­வங்­கா­டி­யில் இன்­னும் ஐவர் அமர்ந்து உண்ண அனு­மதி இல்லை.

உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக் கடை­க­ளி­லும் இந்­தத் தளர்­வு­கள் இன்று முதல் நடப்­புக்கு வந்­தா­லும் அனைத்து உண­வங்­கா­டி­க­ளுக்­கும் கட்­டுப்­பா­டு­கள் உட­ன­டி­யாக தளர்த்­தப்­ப­ட­வில்லை.

இம்­மாத இறு­தி­வாக்­கில் தேக்கா உண­வங்­கா­டி­யில் ஐவர் அமர்ந்து உண்ண வகை­ செய்­யப்­படும் என்று அந்த உண­வங்­காடி நிலை­யத்­தின் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் திரு ஆனந்­த­ராஜ் சொன்­னார். இவர் தேக்கா உண­வங்­கா­டி­யில் உள்ள 'ஸ்கை­லேப் குக்ட் ஃபுட்ஸ்' கடை­யின் உரி­மை­யா­ளர்.

தேக்கா உண­வங்­காடி போன்ற பெரிய உண­வங்­கா­டி­க­ளுக்கு கண்­கா­ணிப்பு முன்­னெச்­ச­ரிக்கை வழி­மு­றை­களை நடப்­புக்­குக் கொண்டு வர இன்­னும் சில வாரங்­கள் தேவைப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஹாஜா ஜய்­னுப் கடை­யின் நிர்­வாகி திரு ரஹ்­மான் அலி, மீண்­டும் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்­பட்­டதை அடுத்து தேக்கா உண­வங்­கா­டிக்கு மக்­கள் கூட்­டம் மீண்­டும் திரும்­பும் என்று நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றார். எனி­னும் இது­வரை வியா­பா­ரம் மிக­வும் மந்­த­மாக உள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களும் பொது­மக்­களும் வார இறு­தி­களில் அதி­க­மாக வரு­வார்­கள் என்று சமாட் தேக்கா தம் பிரி­யாணி கடை­யின் உரி­மை­யா­ளர் திரு தெமா­முல் அன்­சாரி சுட்­டிக்­காட்­டி­னர்.

அத­னால் புதிய தளர்­வு­க­ளால் வார­யி­று­தி­யில் கூட்­டம் அதி­க­ரிக்­கும் என நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக திரு தெமா­முல் கூறி­னார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்கொண்­ட­வர்­கள், 5 பேர் கொண்ட குழுக்­க­ளாக 11 உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் 7 காப்­பிக் கடை­க­ளி­லும் மட்­டுமே அமர்ந்து உணவு உட்­கொள்­ள­லாம். தேசி­ய சுற்­றுப்­புற அமைப்­பும், சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் இதைத் தெரி­வித்­தன.

கூடுதல் செய்தி: சக்தி மேகனா