வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி வரும் பாலர் பள்ளிகள்

கொவிட்-19 நோய்ப் பர­வல் நீடித்து வரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள சில பாலர்­பள்­ளி­கள் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கு உதவி வரு­கின்­றன.

அதன் ஒரு பகு­தி­யாக, குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் நடத்தி வரும் 'என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ்' (என்­எ­ஃப்சி) அடுத்த ஆண்டு முதல் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கான மன­ந­லத் திட்­டத்­தைத் தொடங்­கும்.

திட்­டத்­தின்­கீழ், பெற்­றோ­ருக்கு மன­நல ஆலோ­சனை வழங்­கப்­படும்.

மேலும் சுகா­தா­ரம், சத்­து­ணவு, மன­ந­லம், வளர்ச்­சித் தேவை­கள் உள்ள பிள்­ளை­க­ளுக்கு உத­வு­வது போன்ற அம்­சங்­களில் பெற்­றோ­ருக்­குப் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் நிறு­வ­னம் நடத்­தும். என்­எ­ஃப்­சி­யின் தலைமை குழந்தை ஆத­ரவு அதி­காரி லூயிசா சிங் இதைத் தெரி­வித்­தார்,

வீட்­டில் பிள்­ளை­க­ளின் கற்­ற­லுக்கு உதவ பெற்­றோ­ருக்கு உத­வும் காணொ­ளி­கள், மின்­னி­யல் வளங்­கள் போன்­ற­வற்றை ஆசி­ரி­யர்­கள் தேர்ந்­தெ­டுப்­பார்­கள்.

ஏற்­கெ­னவே என்­எ­ஃப்சி, தனது 'பிரைட் ஹொரை­ஸன்ஸ்' உத­வி­ நிதி­யின் கீழ், வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உதவ $2.4 மில்­லி­ய­னைச் செல­விட்­டுள்­ளது.

கடந்த ஈராண்­டு­க­ளாக குடும்ப வரு­வாய், பிள்­ளை­க­ளின் கற்­றல் ஆகி­ய­வற்­றில் ஏற்­பட்­டுள்ள சவால்­ க­ளைச் சமா­ளிக்க இது உத­வும்.

உதா­ர­ணத்­துக்கு, என்­டி­யுசி நடத்­தும் பாலர்­ பள்­ளி­களில் பயி­லும் சுமார் 4,200 மாண­வர்­க­ளின் குழந்தை வளர்ச்­சிக் கணக்­கில் ஒரே முறை­யாக தலா $400ஐ அது செலுத்­தி­யுள்­ளது.

மேலும், வசதி குறைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பாலர்­கள் பள்­ளிக்கு வரு­வது சற்று குறைந்­துள்­ளதை என்­எ­ஃப்சி கவ­னித்­துள்­ள­தாக திரு­வாட்டி சிங் கூறி­னார்.

சென்ற ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­களில் அத்­த­கைய பாலர்களில் முறையே 63 விழுக்­காட்­டி­ன­ரும் 51 விழுக்­காட்­டி­ன­ரும் பள்­ளிக்­குச் சென்­ற­னர்.

ஒப்­பு­நோக்க, சென்ற ஜன­வ­ரி­யில் வசதி குறைந்த குடும்­பங்­ களைச் சேர்ந்த பாலர்­களில் 81 விழுக்­காட்­டி­ன­ரும் ஏப்­ர­லில் 74 விழுக்­காட்­டி­ன­ரும் பள்­ளிக்கு வந்­த­னர்.

இவ்­வே­ளை­யில் 'ஈட்­டன்­ஹ­வுஸ்' சமூக நிதி, வசதி குறைந்த பாலர் ­க­ளுக்கு கதைப் ­புத்­த­கங்­கள் மீது ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தும் திட்­டத்துக்காக தொண்­டூ­ழி­யர்­க­ளை­த் திரட்டி வரு­கிறது.

'டீச்­சர்ஸ்­எவ்­ரி­வேர்' எனும் அத்­திட்­டத்­தில் இது­வரை 60 பேர் சேர்ந்­துள்­ள­னர்.

பெற்­றோ­ரு­டன் இணைந்து பிள்­ளை­க­ளுக்கு வாசிப்­பில் நல்­ல அடித்­த­ளத்தை அமைத்­துத் தரு­வது திட்­டத்­தின் நோக்­கம் என்று அந்த சமூ­க­நி­தி­யின் இயக்­கு­நர் லின் பெய்­மின் கூறி­னார். ஈட்­டன்­ஹ­வுஸ் பாலர்­பள்ளி குழு­மம் அமைப்பை நடத்­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!