'பிள்ளைகள் பள்ளிக்கு வருவது குறையவில்லை'

'பிள்ளைகள் பள்ளிக்கு வருவது குறையவில்லை'

1 mins read
4137e856-4887-4056-a198-1d719217048b
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த சில மாதங்­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏறி இறங்கி வரும் நிலை­யில், சில பெற்­றோர் தங்கள் பிள்ளைகளை பாலர் பள்­ளிக்கு அனுப்­பு­வ­தைத் தவிர்த்­துள்­ள­னர்.

ஆனால் பாலர்­ பள்­ளி­க­ளுக்­குச் சென்­று­வ­ரும் பிள்­ளை­க­ளின் எண்­ணிக்கை நிலையாகவே உள்­ளது என்­றும் பெரிய அளவில் குறைய வில்லை என்­றும் இங்­குள்ள பாலர்­பள்ளி நடத்­து­நர்­கள் கூறியுள்ளனர்.

பெற்­றோர் பிள்­ளை­களைப் பள்­ளிக்கு அனுப்­பும் நேரம் குறைந்துள்­ ள­தா­கச் சில பாலர் பள்ளிகள் கூறின. சில பெற்றோர் தங்கள் பிள்­ளை­களை சீக்­கி­ர­மாக வீட்­டிற்கு அழைத்­துச் செல்­கின்­ற­னர். அல்­லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிள்­ளை­களை அனுப்­பு­கின்­ற­னர் என்றார் 'பிஸிபீஸ்ஏஷியாவின்' மூத்த இயக்குநர் ரானல்ட் குவோங்.

சில நாட்­களில் பிள்­ளை­க­ளுக்கு உடல்­ந­லம் சரி­யில்­லா­மல் இருக்­கக்­கூ­டும். முன்­னெச்­சரிக்­கை­யாக பெற்­றோர் அவர்­க­ளைப் பள்ளி அனுப்ப மாட்­டார்­கள் என்று 'ஈட்­டன்­ஹ­வுஸ்' பாலர்­பள்­ளிக் குழுமத்­தின் குழு விளம்­பர மற்­றும் சந்­தைப்­ப­டுத்­து­தல் பிரி­வின் இயக்­கு­நர் பிப்­பாஷா மினோச்சா கூறி­னார்.

ஏற்­கெ­னவே மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் அல்­லது குறை­வான எதிர்ப்­பாற்­றல் உள்ள பிள்­ளை­களை அவர்­க­ளின் பெற்­றோர் பள்­ளிக்கு அனுப்­பு­வ­தில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

எனி­னும், பள்­ளி­யில் உள்ள சமூ­கச் சூழல், பிள்­ளை­க­ளு­டன் பழ­கும் வாய்ப்பு, சீரான நட­வ­டிக்­கை­கள் போன்­றவை தங்­கள் பிள்­ளை­ களுக்குக் கிடைக்க வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­க­ திரு­வாட்டி பிப்­பாஷா சொன்­னார்.

அத­னால் அவர்­கள் பெரும்­பா­லும் பிள்­ளை­க­ளைப் பள்­ளிக்கு அனுப்­பவே செய்­கின்­ற­னர் என்­று அவர் குறிப்பிட்டார்.