‘ஆசியான்-சீன எல்லைகள் திறக்க வேண்டும்’

ஆசி­யான் நாடு­கள் தடுப்­பூசி போடு­வ­தில் முன்­னேறி வரு­கின்­றன. இந்த நிலை­யில் சீனா­வும் ஆசி­யா­னும் ஒன்று மற்­ற­தற்கு எல்­லை­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் திறக்க சேர்ந்து செயல்­பட வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

இருதரப்­பி­லும் தடுப்­பூசி சான்றிதழ்­களை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான மின்­னி­லக்க மற்­றும் பாது­காப்­பான தீர்­வு­களை உரு­வாக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டார்.

ேநற்று நடை­பெற்ற ஆசி­யான்-சீனா சிறப்பு மாநாட்­டில் பிர­த­மர் லீ பேசி­னார்.

சீனா­வு­ட­னான உறவை, விரி­வான உத்­தி­பூர்­வ­மாக பங்­கா­ளித்­துவ உற­வாக மேம்­ப­டுத்­தும் ஆசி­யா­னின் முயற்­சி­க­ளைப் பாராட்­டிய திரு லீ, இதன் மூலம் இரு தரப்­பி­லும் பல்­வேறு துறை­களில் ஆழ­மான ஒத்­து­ழைப்பு ஏற்­படும் என்­றார்.

இது, பரஸ்­பர நன்­மை­க­ளுக்கு வழி வகுக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து மற்றும் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­தும் வித­மாக ஆசி­யான்-சீனா விமா­னப் போக்­கு­வ­ரத்து ஒப்­பந்­தத்­தை­யும் ஆசி­யான்-சீனா தடை­யற்ற ஒப்­பந்­தத்­தை­யும் ேமம்­ப­டுத்­தும் வழி­களை நாடு­கள் ஆராய வேண்­டும் என்று திரு லீ மேலும் தெரி­வித்­தார்.

மெய்நிகர் வழி­யாக நடை­பெற்ற மாநாட்­டில் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் கலந்துகொண்டார். ஆசி­யான்-சீனா கலந்­து­ரை­யா­டல் உற­வின் 30வது ஆண்­டைக் குறிக்­கும் வகை­யில் இந்த மாநாடு நடை ெபற்றது.

ஒரு நாள் நிகழ்ச்­சி­யில் நாடு ­க­ளுக்கு இடையே உறவை மேலும் பலப்­ப­டுத்­தும் வழிகள் குறித்து தலை­வர்­கள் ஆலோ­சனை நடத்­தி­னர். வட்­டார, அனைத்­து­லக வளர்ச்சி பற்­றி­யும் அவர்­கள் தங்­க­ளு­டைய கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

"கொள்­ளை­நோய் சூழ­லி­லும் ஆசி­யா­னும் சீனா­வும் தொடர்ந்து உறவை வலுப்­ப­டுத்தி வந்­தன. இதன் விளை­வாக கடந்த ஆண்டு சீனா­வின் முக்­கிய பங்­கா­ளி­யாக ஆசி­யான் மாறி­யுள்­ளது.

இருதரப்பு ஆண்டு வர்த்­த­கம் தற்­போது 500 பில்­லி­யன் யுஎஸ் டாலரை (S$681 பில்­லி­யன்) எட்­டி­யுள்­ளது.

"தன்­னைப்­பே­ணித்­த­னம் அதி­க­ரித்­துள்­ள­போ­தும் வட்­டார விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ வர்த்­தக உடன்­பாட்­டில் ஆசி­யா­னும் சீனா­வும் முன்­னணி வகிக்­கின்­றன," என்று பிர­த­மர் லீ சொன்­னார்.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் கையெ­ழுத்­தான இந்த ஒப்­பந்­தம் ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து அம­லுக்கு வரு­கிறது. இது, உல­கின் ஆகப்­பெ­ரிய வர்த்­தக உடன்­பா­டா­கக் கரு­தப்­ படு­கிறது. ஆசி­யா­னின் பத்து உறுப்பு நாடு­க­ளைத் தவிர, சீனா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான், நியூ­ சிலாந்து, தென்கொரியா ஆகிய நாடு­கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!