‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டை பயன்படுத்தாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட நூறு வெள்ளி பெரு­மா­ன­முள்ள 'சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்' பற்­றுச்­சீட்டை இன்­ன­மும் பயன்­ப­டுத்­தா­த­வர்­க­ளுக்கு மற்­றொரு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு டிசம்­ப­ரில் காலா­ வ­தி­யாக வேண்­டிய அந்­தப் பற்­றுச் சீட்­டு­கள் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செல்­லு­ப­டி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் டிசம்­பர் 31ஆம் தேதிக்­குள் முன்­ப­திவு செய்­வது அவ­சி­யம்.

சிங்­கப்­பூ­ரர்­கள் பற்­றுச்­சீட்டு மூலம் பலன் அடை­வதை உறுதி செய்­வ­தற்­காக அவ­கா­சம் நீட்­டிக்­கப்­பட்­டதாக சிங்­கப்­பூர் பய­ணத் ­து­றைக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

உள்­ளூர் சுற்­று­லாத் தளங்­களை சுற்­றிப்­பார்க்­க­வும் ஹோட்­ட­லில் தங்­க­வும் பதி­னெட்டு வய­துக்கு மேற்­பட்ட ஒவ்­வொரு சிங்­கப்­பூ ­ரருக்­கும் நூறு வெள்ளி மதிப்­புள்ள சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான பற்­றுச்­சீட்டு வழங்­கப்­பட்­டது.

இதனை பத்து, பத்து வெள்­ளி­யாக வெவ்­வேறு இடங்­களில் பயன்­ப­டுத்த முடி­யும்.

"கொவிட்-19 கார­ண­மாக ஒன்று­கூ­டு­வ­தற்­கும் சுற்­று­லாத் தளங்­களில் வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்­கைக்­கு வரம்பு விதிக்­கப்­பட்­ட­தாலும் பற்­றுச்சீட்டை சில­ரால் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை என்­பதை எங்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­கிறது," என்று கழ­கம் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான பற்­றுச்­சீட்டு முத­லில் கடந்த ஜூன் மாதம் காலா­வ­தி­யா­க­வி­ருந்­தது.

ஆனால் ஏப்­ரல் மாதம் பற்­றுச்­சீட்டை இவ்­வாண்டு டிசம்­பர் வரை பயன்­ப­டுத்­த­­லாம் என்று கழ­கம் தெரி­வித்­தது. அப்­போ­தும் சில சிங்கப்­பூ­ரர்­கள் இன்­ன­மும் பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்­தா­மல் இருக்­கின்­ற­னர். இந்த நிலை­யில் மீண்­டும் மார்ச் 31ஆம் தேதி வரை பற்றுச்சீட்டை பயன்­ப­டுத்த கழ­கம் அனுமதி வழங்­கி­யுள்­ளது.

நவம்­பர் 1ஆம் தேதி வரை ஏறக்­கு­றைய 1.3 மில்­லி­யன் சிங்­கப் ­பூரர்­கள் ஒரு­மு­றை­யா­வது பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இதன் மூலம் 1.6 மில்­லி­யன் பரி­வர்த்­த­னை­கள் நடை­பெற்­றுள்­ளன. இன்­ன­மும் 1.66 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் பற்­றுச்சீட்டை பயன்­ப­டுத்­தா­மல் இருக்­கின்­ற­னர்.

கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக உள்­ளூர் பய­ணத்­துறை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­ட­தால் 320 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள 'சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்' உள்ளிட்ட பிர­சா­ரம் கடந்த ஆண்டு ஜூலை­யில் தொடங்­கப்­பட்­டது.

டிசம்­பர் 31ஆம் தேதிக்­குள் 'சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்' முகப்­பு­களில் பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்தி உள்­ளூர் சுற்­று­லாத் தளங்­க­ளுக்­குச் செல்­ல­வும் ஹோட்­டல்­களில் தங்­க­வும் முன்­ப­திவு செய்­ய­லாம்.

சமூக நிலை­யங்­கள், சமூக மன்றங்­கள் உட்­பட 66 இடங்­களில் இதற்­கான முகப்­பு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

'Changi Recommends', 'GlobalTix', 'Traveloka', 'Trip.com' and 'Klook' ஆகிய இணை­யத் தளங்­க­ளி­லும் பற்­றுச்­சீட்ைட பயன் ­ப­டுத்தி முன்­ப­திவு செய்­ய­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!