பயணி காயம்; கார் ஓட்டுநருக்கு அபராதம்

பயணி காயம்; கார் ஓட்டுநருக்கு அபராதம்

1 mins read
4095aae6-2fe9-4b2a-b220-bf01063b3201
கார் ஓட்டுநர் டாங் டோபியோவ்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கார் ஓட்டுநர் ஒருவர் திடீரென 'பிரேக்' போட்டு வாகனத்தை நிறுத்தியதால் அதன் மீது மோதுவதைத் தவிர்க்க பொதுப் பேருந்து ஓட்டுநர் சடாரென தனது வாகனத்தை நிறுத்தினார்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்தார். எஸ்­பி­எஸ் பேருந்­தில் நின்­று­கொண்டு பய­ணம் செய்த 60 வயது அந்தப் பயணிக்கு விலா எலும்பு முறி­வும் முது­குத் தண்­டில் காய­மும் ஏற்­பட்­டது. கார் ஓட்­டு­ந­ரான 65 வயது டாங் டோ பியோவ் கவ­னக் குறை­வா­கச் செயல்­பட்டு பய­ணிக்கு காயம் விளை­வித்த குற்­றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்­புக்கொண்­டார். அவ­ருக்கு 2,500 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. பேருந்து ஓட்­டு­நர் ஓங் சுவான் ஹாய்க்கு, 64, இதே குற்றச் ­சாட்­டுக்காக கடந்த மாதம் 1,500 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. இரு சிங்­கப்­பூ­ரர்­களும் இரண்டு மாதங்­க­ளுக்கு எல்­லா­வித வாக­னங்­கள் ஓட்ட தடை விதிக்கப் பட்­டுள்­ளது. இந்தச் சம்பவம் 2019 மே 30ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் தெம்பனிஸ் அவென்யூ 7 அருகே நிகழ்ந்தது.