கம்பன் விழாவில் இளையர்கள் ஆதிக்கம்

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் நடத்­திய கம்­பன் விழா­வில் இளை­யர்­கள் ஆதிக்­கம் செலுத்­தும் நிகழ்ச்சியாக அமைந்­துள்­ளது என்று அவ்­வி­ழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட இந்து அறக்­கட்­டளை வாரி­யத் துணைத் தலை­வர் திரு. இரா. தின­க­ரன் கூறி­யி­ருக்­கி­றார்.

கடந்த சனிக்­கி­ழமை குவி­யம் வழி­யாக நடை­பெற்ற அவ்­வி­ழா­வில் நிகழ்ச்சி நெறி­யா­ளர்­கள், பேச்­சா­ளர்­கள் அனை­வ­ரும் இளை­யர்­க­ளாக இருந்தனர். மாணவி ஒரு­வர்­ 'திரைப்­பா­டல்­களில் கம்­ப­னின் கவி­தை­கள்' என்­னும் தலைப்­பில் பேசி­னார். கம்­பன் கவி­தை­களில் நடத்­தப்­பெற்ற போட்­டி­களில் நூற்­றுக்கு மேற்­பட்ட மாண­வர்­கள் பங்­கேற்­ற­தா­கத் தெரி­வித்­தார்­கள். இத்­த­கைய முயற்­சி­கள் மூலம் கம்­பன் சொல்­லும் விழு­மி­யங்­கள் இளை­யர்­க­ளைச் சென்று சேரும் வாய்ப்பு அதி­க­முள்­ளது என்று திரு தினகரன் தெரி­வித்­தார்.

அர­சாங்­கம் நடத்­தும் எழுத்­தா­ளர் விழா­வில் தமிழ் நிகழ்ச்­சி­களில் அதி­க­மா­னோர் பங்­கேற்­ப­தில்லை என்­றும் இது வருந்­தத்­தக்­கது என்­றும் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­பன் தமது தலை­மை­யு­ரை­யில் பேசி­ய­தைச் சுட்­டிய திரு. தின­க­ரன் அத்­த­கைய தமிழ் நிகழ்ச்­சி­களில் தமி­ழர்­கள் அதி­கம் பங்­கேற்க வேண்­டும் என்­றும் அதற்­குத் தமிழ் அமைப்­பு­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்கொண்­டார்.

இரு­வர் என்­னும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றிய இளம் வழக்­கு­ரை­ஞர் செல்வி கோ.சு. சிம்­ஹாஞ்­சனா, இர­ணி­யன் மகன் பிர­க­லா­த­னை­யும் வாலி­யின் மகன் அங்­க­த­னை­யும் ஒப்­பிட்­டுப் பேசி­னார். இரு­வ­ரும் இளம் வய­தி­லேயே 'நான்' என்ற அகந்­தை­யில்­லா­மல் ஆத்­ம­ஞா­னம் பெற்­ற­வர்­கள் என்­றார் அவர்.

சொல் நூற்­க­லுற்­றேன் என்­னும் கம்­ப­னின் வரி­யைத் தலைப்­பாக எடுத்­துக்­கொண்டு பேசிய இளை­ஞர் திரு. த. திரு­மா­றன் இரா­ம­னை­யும் இரா­வ­ண­னை­யும் ஒப்­பிட்­டுப் பேசி­னார். இரு­வ­ரும் தவ­று­களும் செய்­தி­ருக்­கி­றார்­கள், நன்­மை­களும் செய்­தி­ருக்­கி­றார்­கள், ஆனால் இரா­மன் தனது தவ­று­க­ளுக்கு வருந்­து­கி­றான், அத­னால் அவன் உயர்ந்து நிற்­கி­றான். இரா­வ­ணன் வருந்­தாத கார­ணத்­தால் தாழ்ந்துவிடு­கி­றான் என்­றார்.

இரு பேச்­சா­ளர்­க­ளுமே புதிய கோணத்­தில் கம்­ப­னின் காவி­யத்தை அணு­கி­யதை பார்­வை­யா­ளர்­கள் வெகு­வாக வர­வேற்­ற­னர்.

ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக்கல்­லூரி மாணவி செல்வி சரண்யா முசிலா, "திரைப்­பா­டல்­களில் கம்­ப­னின் கவி­தை­கள்" என்­னும் தலைப்­பில் உரை ஆற்­றி­னார்.

தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழா­வில் மாண­வி­கள் பூஜா, கீர்த்­தனாவின் நட­னக் காணொ­ளி­யும் ஒளி­யேற்­றப்­பட்­டது. எழுத்­தா­ளர் கழ­கச் செய­லா­ளர் திரு­வாட்டி கிருத்­திகா வர­வேற்­புரை ஆற்ற, துணைச் செய­லா­ளர் திரு. கோ. இளங்­கோ­வன் நன்­றி­யுரை ஆற்­றி­னார்.

எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், போட்டிகளின் நான்கு பிரிவு களிலும் வெற்றி பெற்ற மாணவர் களின் பெயர்களை அறிவித்தனர்.

மாணவர்கள் திரு. சுசூக்கி தர்மராசு மற்றும் செல்வி கீர்த்தனா நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!