முக்கிய குற்றவாளிக்கு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை, பிரம்படி

முக்கிய குற்றவாளிக்கு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை, பிரம்படி

3 mins read
73bf5660-179f-4f94-b7b2-1d28ad13902a
சிராங்கூன் ரோடு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான அர்ஜுன் ரத்னவேலு (கையில் விலங்குடன்), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சமுராய் வாளை வீசி எறிந்த லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிராங்­கூன் ரோட்­டில் 2018ல் நடந்த கும்­பல் தாக்­கு­தல் சம்­ப­வத்­தில் முக்­கிய குற்­ற­வா­ளிக்கு எட்டு ஆண்டு சீர்­தி­ருத்­தப் பயிற்சி தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது. அர்­ஜுன் ரத்­ன­வேலு, 27, என்ற அந்த ஆட­வருக்கு 24 பிரம்­படி கொடுக்­கும்­ப­டி­யும் உத்­தரவிடப் பட்டது.

அர்­ஜுன், 2010 முதல் பல குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தற்­காக நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு, சீர்­தி­ருத்தப் பயிற்சி, பிரம்­ப­டி­க­ளு­டன்­கூ­டிய சிறைத்­தண்­டனை போன்ற பல்­வேறு தண்­ட­னை­க­ளைப் பெற்­ற­வர். மீண்­டும் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­தால் அவ­ருக்கு கூடு­த­லாக 360 நாட்­கள் சிறைத்­தண்­டனை நேற்று விதிக்­கப்­பட்­டது.

அர்­ஜுன் ஐந்து குற்­றச்­சாட்­டு­களின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவ­ரு­டன் சேர்ந்து குற்­றம் சுமத்­தப்­பட்ட பிர­வின் ராஜேந்­தி­ரன், 27, என்­ப­வ­ருக்கு நேற்று 16 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இவர், விசா­ர­ணை­யின் நடு­வி­லேயே குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

வினோத் ராஜேந்­தி­ரன், 33, என்­ப­வ­ருக்­கும் பிர­வி­னுக்­கும் இடை­யில் பிரச்­சினை இருந்­தது. அதைத் தீர்த்து வைக்­கும்­படி பிர­வின் அர்­ஜுனை கேட்­டுக்­கொண்­டார். அதற்கு அர்­ஜுன் சம்­ம­தித்­தார்.

2018 மார்ச் 10ஆம் தேதி அதி­காலை சுமார் 3 மணிக்கு லேபான் பார்க்­கில் ஒரு கத்­தி­யு­டன் வினோத் ராஜேந்­தி­ரனை அர்­ஜுன் அணு­கி­னார். தப்­பித்து ஓட முயன்ற வினோத் தடு­மாறி கீழே விழுந்­து­விட்­டார். பிர­வின் முன்­னி­லை­யில் வினோத்தை பல முறை கத்­தி­யால் அர்­ஜுன் தாக்­கி­னார்.

இரண்­டா­வது சம்­ப­வம் 2018 ஜூலை 25ஆம் தேதி நிகழ்ந்­தது. அர்­ஜு­னும் இதர நான்கு பேரும் சிராங்­கூன் ரோட்­டில் சாப்­பி­டு­வ­தற்­காக காரில் சென்று கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது தினிஷ் செல்­வ­ராஜா, 27, என்­ப­வரை அர்­ஜுன் பார்த்­தார். அவர் பிராட்வே ஹோட்­ட­லுக்கு எதிரே உள்ள பேருந்து நிலை­யத்­தில் இருந்­தார். அர்­ஜு­னுக்­கும் தினிஷ் செல்­வ­ரா­ஜா­வுக்­கும் இடை­யில் பல பிரச்­சி­னை­கள் ஏற்­கெனவே இருந்து வந்­துள்­ளன.

தினிஷைப் பார்த்­த­தும் காரை நிறுத்­தச் சொன்ன அர்­ஜுன், காரில் இருந்து வெட்­டுக்­கத்­தியை எடுத்­துக்­கொண்­டார். அவ­ரு­டன் இருந்த தினேஷ்­கு­மார் ரூவே என்­ப­வர் சமு­ராய் கத்­தியை எடுத்­துக்­கொண்­டார். அதே சம­யம் ஷர்­வின் ராஜ் சூரஜ் என்­ப­வர் கழி ஒன்றை எடுத்­துக்­கொண்­டார்.

விக்­டர் அலெக்­சாண்­டர் ஆறு­மு­கம், ஹரிஷ் சண்­மு­க­நா­தன் என்ற இதர இரு­வ­ரி­டம் ஆயு­தம் எது­வும் இல்லை.

அந்த ஐந்து பேரும் சேர்ந்து பேருந்து நிலை­யத்­தில் இருந்த தினிஷ் செல்­வ­ரா­ஜாவைத் தாக்­கி­னர். அந்­தத் தாக்­கு­தல் கார­ண­மாக போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

அப்­போது வெட்­டுக்­கத்­தியை அர்­ஜுன் தவ­று­த­லாக கீழே விட்டு­விட்­டார். ஷர்­வி­னி­டம் இருந்து லத்­தியை வாங்கி அதை­வைத்து செல்­வ­ரா­ஜாவை தாக்­கி­னார். பிறகு அவர்­கள் காரில் ஏறி தப்­பி­விட்­ட­னர். அதை­ய­டுத்து மதன் ராஜ் குண­சே­க­ரன் என்ற தன் நண்­பரை அழைத்த அர்­ஜுன் அவ­ரி­டம் சமு­ராய் கத்­தி­யை­யும் லத்­தி­யை­யும் கொடுத்­தார். இவர்­கள் அனை­வ­ருக்­கும் எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்ட செல்­வ­ராஜா ஒரு வாரம் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். இதன் கார­ண­மாக அவ­ருக்கு வலது காலின் பாதி பாதத்தை எடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது. உட­லின் இதர பகு­தி­க­ளி­லும் காயங்­கள் ஏற்­பட்­டன.

இந்த விவ­ரங்­கள் விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டது. இந்த வழக்­கில் ஹரி­ஷுக்கு மூன்­றாண்டு சிறைத்­தண்­ட­னை­யும் ஆறு பிரம்­ப­டித் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டது.

விக்­ட­ருக்கு இரண்டு ஆண்­டு­களுக்­கும் மேற்­பட்ட சிறைத்­தண்­டனை கிடைத்­தது. ஷர்­வி­னுக்கு சீர்­தி­ருத்­தப் பயிற்சி தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தினே­ஷுக்கு எதி­ரான வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

2018ஆம் ஆண்டில் நடந்த சிராங்கூன் ரோடு கும்பல் தாக்குதல்: