மேலும் 1,461 பேருக்குக் கிருமித்தொற்று; ஐவர் மரணம்

மேலும் 1,461 பேருக்குக் கிருமித்தொற்று; ஐவர் மரணம்

2 mins read
b411bdeb-58dd-4641-b16f-4b20ae2d382d
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மேலும் 1,461 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு முந்­திய நாளில் இந்த எண்­ணிக்கை 1,670ஆகப் பதி­வா­னது.

கடந்த செப்­டம்­பர் மாதம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து

ஒரு­நா­ளில் பதி­வான ஆகக் குறை­வான எண்­ணிக்கை இது. செப்­டம்­பர் மாதம் 27ஆம் தேதி 1,647 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் நோய்­வாய்ப்­பட்ட 1,461 பேரில் 1,415 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களில் 40 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த ஆறு பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 247 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள்.

வாராந்­திர தொற்று உயர்வு விகி­தம் நேற்று 0.79ஆகக் குறைந்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று இவ்­வி­கி­தம் 0.81ஆக இருந்­தது.

மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் படுக்­கைப் பயன்­பாட்டு விகி­தம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 52.9 விழுக்­கா­டாக இருந்த நிலை­யில், நேற்று அது 53.5% எனச் சற்றே கூடி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 253,649ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதற்­கி­டையே, கொரோனா

கிரு­மித்­தொற்­றால் நேற்று முன்­தி­னம் 61 முதல் 105 வய­திற்­குட்­பட்ட மேலும் ஐவர் இறந்­து­விட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 667ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 62 பேரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் அவர்­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்டு அவர்­க­ளுக்­குச் செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.