குறும்படத்துக்கு இரண்டு விருதுகளை வென்றுள்ள சிங்கப்பூரர் மில்லத் அகமது

குறும்படத்துக்கு இரண்டு விருதுகளை வென்றுள்ள சிங்கப்பூரர் மில்லத் அகமது

3 mins read
0f8effd3-b59b-4d1b-8c87-b0bd62c8727f
இரு விருதுகள் வென்ற மில்­லத் அக­மது.படம்: மில்லத் அகமது -

கே.கே.பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் மருத்­து­வ­ம­னை­யில் 14 ஆண்டு­கா­ல­மாக மருந்­தக தொழில்­நுட்ப வல்­லு­ந­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் மில்­லத் அக­மது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக ஓய்­வின்றி உழைத்து வரு­கி­றார்.

ஊர­டங்கு கால­கட்­டத்­தில் இந்­தி­யா­வில் இறந்­து­போன தனது தாயா­ரின் இறு­திச் சடங்­கில் அக­ம­தால் கலந்துகொள்­ள­மு­டி­யா­மல் போன­தால், அவர் பெரி­தும் மன­மு­டைந்­தார்.

அதி­லி­ருந்து மீள எழு­தத் தொடங்­கி­ய­வர், 'அம­ரா­வதி' என்ற வர­லாற்று நாட­கத்தை எழுதி நூலாக மாற்­றி­னார். அது விரை­வில் அறி­மு­கம் காண உள்­ளது.

தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் இருந்து தனது மன நிலையை மாற்­ற­வும் மற்­ற­வர்­களை ஊக்­கு­விக்­க­வும் ஏதா­வது செய்ய வேண்­டும் என யோசித்­தார்.

டிசம்­பர் 2020ல் நேரடி பாடல் இசை­ய­மைப்பு பதிவு நிகழ்வை உரு­வாக்கி, இயக்கி ஆசிய சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பி­டித்­தார்.

ஜூன் மாத பள்ளி விடு­மு­றை­யின்­போது தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான நீதிக்­கதை சொல்­லும் போட்­டியை நடத்தி, பங்­கேற்ற அனை­வ­ருக்­கும் சான்­றி­த­ழும் புத்­த­கப் பரி­சு­க­ளை­யும் வழங்­கி­னார்.

இதைத்ெ­தா­டர்ந்து சிங்­கப்­பூர் சார்­பாக தனி­நபர் சாத­னை பற்­றி­யும் சிந்­திக்க ஆரம்­பித்­தார்.

கொவிட்-19 தொற்று பாதிப்­பால் உல­கத்தில் பல்­லா­யி­ரக்­கணக்­கான மக்­கள் தங்­க­ளது கனவு நன­வா­கும் முன்பே இறந்து போயி­னர். அதை மன­தில் வைத்து ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் ஐந்து வார்த்­தை­களில் மிகச்­சி­றிய கதையை எழுதி புதிய உலக சாதனை படைத்­தார்.

நடிப்பு, ஒப்­பனை, உடை­கள், கலை, உதவி ஒளிப் பதிவு, பின்­னணி, ஒலிக் கலவை, தலைப்பு, தயா­ரிப்பு வடி­வ­மைப்பு, எடிட்­டிங், கதை, திரைக்­கதை, வச­னம், பாடல் வரி­கள், தயா­ரிப்­பா­ளர், இயக்­கு­நர் என 16 பொறுப்­பு­க­ளை­யும் தன்­மு­னைப்­புக் குறும்பட­மான 'அறி'யில் செய்­துள்­ளார். இதன் மூலம், ஒரு குறும்­ப­டத்­தில் அதிக பொறுப்­பு­க­ளைச் செய்த ஒரே நபர் என்ற புதிய உலக சாத­னையை அக­மது படைத்­தார்.

இந்­தக் குறும்­ப­டம் சிங்­கப்­பூர் திரைப்­பட விழா விருது 2021, நோபல் அைனத்­து­லக திரைப்­பட விழா விருது 2021 ஆகி­ய­வற்றை வென்­றது.

இவ்விரு சாத­னை­களும் அக்­டோ­பர் 2021ல் கலா­மின் உலக சாத­னைப் புத்­த­கத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

அக­மது தனது உலக சாத­னைக்­காக பிர­த­மர் லீ சியன் லூங் சார்­பாக கலா­சா­ரம், சமூ­கம் மற்­றும் இளை­ஞர் அமைச்­சி­ட­மி­ருந்து வாழ்த்­துக் கடி­தத்­தைப் பெற்­றுள்­ளார்.

இந்த வாழ்த்­து­கள் மேலும் சாதிக்­க­வும் சமூ­கத்­திற்குப் பங்­க­ளிக்­க­வும் ஊக்­க­ம­ளிப்­ப­தா­க அவர் கூறி­யுள்­ளார்.

அவ­ரது மனைவி திரு­மதி ஜீனத் பேகம் கூறு­கை­யில், ஆரம்­பத்­தில் 13 வார்த்­தை­கள் கொண்ட கதையை எழுதி கின்­னஸ் உலக சாத­னைக்கு விண்­ணப்­பித்­தார். ஆனால் கின்­னஸ் அதனை ஏற்க மறுத்து, அமெ­ரிக்க நாவ­லா­சி­ரி­யர் எர்­னஸ்ட் மில்­லர் ஹெமிங்வே எழு­திய 6 வார்த்தை கதை இருப்­ப­தா­கத் தெரி­வித்­தது.

மறைந்த முன்­னாள் இந்­தி­ய அதிபர் விஞ்­ஞானி டாக்­டர் ஏ.பி.ஜே. அப்­துல் கலாம், "கனவு என்­பது தூக்­கத்­தில் காண்­பதல்ல; கனவு என்­பது உங்­க­ளைத் தூங்கவிடாத ஒன்று," என்­கி­றார். அதேபோல், ஆறு வார்த்­தை­க­ளுக்­குள் கதையை எழு­து­வதற்காக பல நாட்­கள் உறங்­கா­மல் சிந்­தித்­து, இறு­தி­யில் ஐந்து வார்த்­தை­களில் கதையை எழுதி கின்­னஸ் சாத­னைப் புத்­த­கத்­திற்கு விண்­ணப்­பித்­தார்.

"ஆனால் அவர்­கள், மற்­ற­வர்களால் முறி­ய­டிக்­கப்­படும் சாத­னை­களை மட்­டுமே நாங்­கள் ஏற்­றுக்­கொள்­கி­றோம். எனவே வேறு சாத­னைக்கு முயற்சி செய்­யுங்­கள் என்­றனர். இப்­போது கின்­ன­ஸில் புதிய உலக சாத­னைப் படைக்க என் கண­வர் திட்­ட­மிட்­டுள்­ளார். அவர் வெற்­றி­பெற எனது ஆத­ரவை வழங்­கு­வேன்," என்­கி­றார்.