நடமாட்டம் குறித்து பொய்கூறிய சீனத் தம்பதிக்கு சிறை

1 mins read
2366df5c-f2fe-4112-b3a8-4073117619e9
-

தொற்­று­நோய்­கள் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் குற்­ற­வாளி என்று கண்­ட­றி­யப்­பட்ட 38 வயது மாதுக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்­கப்­பட்­டது.

ஷி ஷா எனும் அந்த மாது, கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லில் சுகா­தா­ரத் துறை அதி­காரி கட­மை­யாற்­று­வ­தற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­னார் என்­றும் தக­வல்­களை மறைத்து, பொய்த்­த­க­வலை அளித்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

அவ­ரது கண­வ­ரான 40 வயது ஹுன் ஜுன்­னுக்­கும் நேற்று தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் ஐந்து மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவர் மற்றோர் அதி­கா­ரி­யி­ட ­மி­ருந்து தக­வல்­களை மறைத்­தி­ருந்­தார்.

சீனா­வைச் சேர்ந்த இரு­வ­ருக்­கும் நீதி­மன்ற வழக்கு ஒன்­றாக நடை­பெற்­றது. கடந்த மாதம் 26ஆம் தேதி இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டதை அடுத்து, நேற்று தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லில் தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் குற்­றஞ்­சாட்டப்பட்ட முதல் நபர்­கள் இவர்­கள் ஆவர்.

ஷி ஏற்கெ­னவே சிங்­கப்­பூ­ரில் வசித்து வந்­த­வர். அவ­ரது கண­வர் ஹு, கடந்த ஆண்டு ஜன­வரி 22ஆம் தேதி வூஹா­னி­லி­ருந்து இங்கு வந்­தார். அவ­ருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டது. பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜன­வரி 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இரு­வ­ரும் தங்­கள் நட­மாட்­டம் குறித்த தக­வல்­களை மறைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.