தாவரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இறைச்சி போன்ற புரத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முதல் பெரிய, தானியங்கி உற்பத்தி நிலையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
'குரோத்வெல் ஃபுட்ஸ்' எனும் நிறுவனம் அந்த நிலையத்தை நடத்துகிறது. அந்த உள்ளூர் நிறுவனம் இதை நடத்துகிறது.
தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் இறைச்சி போன்ற புரதப் பொருட்களை உலக நாடு களுக்கு விநியோகிக்க நிறுவனம் திட்டமிடுகிறது.
புதிய நிலையம் 'ஜேடிசி ஃபுட்ஹப் செனோக்கோ'வில் அமைந்துள்ளது. இந்த ஏழு மாடிக் கட்டடம், சிங்கப்பூரில் உணவுப் புத்தாக்கத்துக்காக மட்டும் கட்டப்பட்டுள்ளது.
உற்பத்தி நிலையம், ஓராண்டில் 4,000 மெட்ரிக் டன் எடையுள்ள தாவரப் புரத உணவுகளைத் தயாரிக்க வல்லது. ஆண்டுக்கு 1,600க்கும் அதிகமாணவர்களுக்குத் தேவையான உணவு இது.
மேலும் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புக்கும் புதிய உற்பத்தி நிலையம் பங்களிக்கும். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் சத்துணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை அந்த தொழிற்சாலையால் தயாரிக்க முடியும்.
நிலையத்தில் உள்ள சிறப்புச் சாதனங்களுக்காக தெமாசெக் நிறுவனம் குரோத்வெல் ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு கணிசமான நிதியை வழங்கியுள்ளது.
இறைச்சியைப் போன்ற அதே சுவையும் தோற்றமும் இருப்பதை உறுதிசெய்ய அந்த இயந்திரங்கள் பயன்படுகின்றன.

