2வது நாளாக நீடித்த டிபிஎஸ் மின்னிலக்க சேவைத் தடங்கல்

2வது நாளாக நீடித்த டிபிஎஸ் மின்னிலக்க சேவைத் தடங்கல்

2 mins read
5312df10-3806-4c75-ba30-7a160730924f
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் அனுப்பிய படம். -

பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள ஆகப்பெரிய இடையூறு என கணிப்பு

டிபி­எஸ் வங்கி மற்­றும் பிஓ­எஸ்பி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சேவைத் தடங்­கலை ஏற்­ப­டுத்தி கிட்­டத்­தட்ட 15 மணி நேரம் நீடித்த மின்­னி­லக்க வங்­கிப் பிரச்­சினை நேற்­றுக் காலை மீண்­டும் எழுந்­தது.

இது­தொ­டர்­பாக நேற்­றுக் காலை 10.50 மணிக்கு டிபி­எஸ் தனது ஃபேஸ்புக் பதி­வில் விளக்­கி­யது.

"துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மாக எழுந்த மின்­னி­லக்க வங்­கிப் பிரச்­சினை எங்­க­ளது சேவை­க­ளைப் பாதித்­து­விட்­டது. இடை­யில் சரிசெய்யப்பட்ட பிரச்­சினை மீண்­டும் தொடங்கி உள்­ளது," என்று அது குறிப்­பிட்­டது.

சேவைத் தடங்­க­லால் ஏரா­ள­மான வாடிக்­கை­யா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­பதை அறிந்­துள்­ளோம்.

"பிரச்­சி­னை­யைத் தீர்க்க எங்­க­ளால் இயன்ற வரை முயன்று வரு­கி­றோம். இடை­யூறு எற்­பட்­ட­தற்­காக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­

கி­றோம்," என்­றும் டிபி­எஸ் வங்கி கூறி­யது.

முன்­ன­தாக, அதி­காலை 2 மணி­ய­ள­வில் சேவை சீர­டைந்­த­தாக காலை 8.15 மணி­ய­ள­வில் டிபி­எஸ் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் மீண்­டும் சேவைத் தடங்­கல் ஏற்­பட்­ட­தாக காலை 9 மணி­ய­ள­வில் வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் தெரி­வித்­த­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் ஃபேஸ்புக் வாயி­லா­கப் புகார்­க­ளைப் பதிவு செய்த வண்­ணம் இருந்­த­னர்.

காலை 9.15 மணி­ய­ள­வில் 360க்கும் அதி­க­மான புகார்­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

மின்­னி­லக்க வங்­கிப் பிரச்­சினை செவ்­வாய்க்­கி­ழமை காலை 10 மணி­ய­ள­வில் தொடங்­கி­யது. கடந்த பத்து ஆண்­டுகளில் காணாத ஆகப் பெரிய வங்­கிச் சேவை இடை­யூ­றாக இது கரு­தப்­ப­டு­கிறது.

இதற்கு முன்­னர் 2010ஆம் ஆண்டு பய­னீட்­டா­ளர் மற்­றும் வர்த்­தக வங்கி சேவை­கள் உள்­ளிட்ட எல்­லாச் சேவை­க­ளி­லும் தடங்­கல் ஏற்­பட்­டது.

சேவைத் தடங்­கல் இணைய வங்கி, பேநவ் பணப் பரி­மாற்­றச் சேவை போன்­ற­வற்­றில் நேற்­றும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தாக டிபி­எஸ் சிங்­கப்­பூர் மேலா­ளர் ஷீ சே கூன் நேற்று கூறி­னார்.

இருப்­பி­னும் ரொக்­கம் செலுத்­தும் டிபி­எஸ், பிஓ­எஸ்பி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எந்­தப் பாதி­ப்பும் இல்லை என்­றார் அவர். நேர­டி­யாக வங்­கி­யில் வழங்­கப்­படும் சேவை எவ்­வித இடை­யூ­று­மின்றி தொட­ரு­வ­தா­க­வும் தமது ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றிய காணொளி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டார்.

"எங்­க­ளது எல்லா வங்­கிக் கிளை­க­ளி­லும் வங்­கிச் சேவை நேரத்தை இரண்டு மணி நேரம் நீடித்­தி­ருக்­கி­றோம். எங்­க­ளது தொடர்பு மேலா­ளர்­களும் அழைப்பு மைய வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­களும் அவ­சர வங்­கிச் சேவை­க­ளுக்கு உதவ தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்டு உள்­ள­னர்," என்­றார் திரு ஷீ.

சேவையை வழக்­க­நி­லைக்கு மீட்ெட­டுக்க இரவு பகலாக மூன்­றாம் தரப்பு பொறி­யா­ளர் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து வங்கி நிர்­வா­கம் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். தொடர்ந்து சிரமம் ஏற்படுத்தி யதற்காக வாடிக்கையாளர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண் டார்.