தேர்வெழுத வந்தபோது கொவிட்-19 தொற்றியது; சிரமம் கடந்த மாணவர்

2 mins read
e221f16b-fa4b-475a-ad95-7d45864d5345
மலாய், அறிவியல் பாடங்களை எழுத முடியாததால் வேதனை அடைந்ததாகக் கூறிய ஜெனிஃபர் முத்துராமன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அக்­டோ­ப­ரில் தொடக்­கப் பள்ளி இறு­தித் தேர்வு (பிஎஸ்­எல்இ) தேர்வு எழு­தத் தொடங்­கு­வ­தற்கு சில நிமி­டங்­கள் முன்­ன­தாக தொடக்­கப்­பள்ளி 6 மாண­வர் ஜெனி­ஃபர் முத்­து­ரா­ம­னுக்கு கொவிட்-19 ஏஆர்டி விரை­வுப் பரி­சோ­தனை முடி­வில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

டமாய் தொடக்­கப் பள்ளி மாண­வ­ரான அவர் மலாய் மொழிப் பாடத் தேர்வு எழுத ஏற்­கெ­னவே கிருமி தொற்றிய சக மாண­வ­ரோடு சென்­ற­போது பள்­ளி­யில் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

"எனக்கு கொவிட்-19 உறுதி ஆனதை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­தேன். எனது தாய்­மொழி மற்­றும் அறி­வி­யல் பாடங்­களை என்­னால் எழுத முடி­யாது என்­பதை அறிந்து வேதனை அடைந்­தேன்," என்­றார் ஜெனி­ஃபர், 12.

மறு­நாள் அவர் அறி­வி­யல் பாடத் தேர்வு எழுத இருந்­தார்.

உட­ன­டி­யாக அவ­ரை அழைத்­துச் சென்ற பெற்­றோர் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­த­தில் அதி­லும் அவ­ருக்கு தொற்று உறுதி ஆனது.

அத­னைத் தொடர்ந்து மூன்று வாரங்­க­ளுக்கு இல்­லத்­தில் குண­

ம­டை­யும் வித­மாக பெற்­றோ­ரி­ட­

மி­ருந்­து தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டார். அந்த வீட்­டின் ஒரே பிள்ளை அவர்.

கொவிட்-19 பாதிப்பு கார­ண­மாக பிஎஸ்­எல்இ தேர்­வின் சில பாடங்­களை எழுத முடி­யாத இதர மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­து­போல ஜெனி­ஃப­ருக்­கும் அவர் எழு­தத் தவ­றிய இரு பாடங்­க­ளுக்கு சிறப்பு தரப்­புள்­ளி­கள் வழங்­கப்­பட்­டன.

தேசிய அள­வி­லும் பள்­ளித் தேர்­வு­க­ளி­லும் அந்­தப் பாடங்­களில் அவர் எவ்­வாறு சிறந்து விளங்­கி­னார் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் அந்­தப் புள்­ளி­கள் வழங்­கப்­பட்­டன. மொத்த மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர் உயர்­நி­லைப் பள்­ளி­யில் வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரி­வுக்­குத் தகுதி பெற்­றுள்­ளார்.

இவ­ரைப் போல இவ்­வாண்டு சுமார் 1,070 மாண­வர்­கள் கொவிட்-19 தொற்று கார­ண­மாக குறைந்­த­பட்­சம் ஒரு பாடத் தேர்வை எழுத முடி­யா­மல் போன­தாக கல்வி அமைச்சு கூறி­யது. இது இவ்­வாண்டு பிஎஸ்­எல்இ தேர்­வுக்­குப் பதிவு செய்த மாண­வர்­களில் 2.7 விழுக்­காடு. கடந்த ஆண்டு இது 0.4 விழுக்­கா­டாக இருந்­தது. அதா­வது கடந்த ஆண்டு 140 மாண­வர்­கள் மட்­டுமே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.