புதிய மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர் கருத்து

புதிய மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர் கருத்து

1 mins read
3417e4bb-f48e-4a0f-b0f4-3f0990de8afb
-

கல்­வித் துறை­யில் பல்­லாண்டு கால­மா­கப் பின்­பற்றப்பட்டு வந்த டி-ஸ்கோர் முறை முடி­வுக்கு வந்­து­விட்­டது. அதற்­குப் பதி­லாக புதிய மதிப்­பீட்டு முறை நடப்­புக்கு வந்­துள்­ளது. அதன்­படி இவ்­வாண்டு பிஎஸ்­எல்இ தேர்வு புதிய மதிப்­பீட்டு முறை­யில் நடை­பெற்­றுள்­ளது. இந்­தப் புதிய முறை மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் நிம்­ம­தி­யைத் தந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டா­லும் எல்­லோ­ருக்­கும் அவ்­வாறு இல்லை எனத் தெரிய வந்­துள்­ளது. "என்­ன­தான் மதிப்­பீட்டு முறையை மாற்­றி­னா­லும் முழு­மை­யான பிஎஸ்­எல்இ தேர்வு முறை அப்­ப­டியே உள்­ளது. 200க்கு மேல் மதிப்­பெண் பெறு­வ­தற்­குப் பதி­லாக 1 முதல் 20 வரை என மதிப்­புப் புள்­ளி­களை தற்­போது எதிர்­பார்க்­கி­றோம். அவ்­வ­ள­வு­தான்," என்­றார் தொடக்­க­நிலை 6 படிக்­கும் மாண­வர் ஒரு­வ­ரின் தந்தை. அதேநேரம் புதிய மதிப்பீட்டு முறையால் மதிப்பெண் பற்றி பிள்ளைகள் கவலைப்பட வேண்டியதில்லை என டேரில் கூ, 42, என்னும் தந்தை ஒருவர் கூறினார்.