புதிய மதிப்பீட்டு முறையால் முன்னேற்றம் காணும் மாணவர்கள்

உயர்­நி­லைப் பள்­ளி­களில் வழக்­க­

நி­லைக்­குத் தகுதி பெற்­றுள்ள அதி­க­மான மாண­வர்­கள் புதிய மதிப்­பீட்டு முறை­யின்­கீழ் உயர்மட்ட பாடங்­களை எடுத்­துப் படிக்­க­லாம்.

அதன்­படி இவ்­வாண்டு சுமார் 65 விழுக்­காட்டு மாண­வர்­கள் வழக்­க­நி­லைக்­கும் வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரி­வுக்­கும் தகுதி பெற்­றி­ருப்­ப­தா­க­வும் அவர்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில் அதிக விருப்­ப­முள்ள நிலை­யில் உள்ள குறைந்­த­பட்­சம் ஒரு பாடத்­தைத் தேர்வு செய்­ய­லாம் என கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு தொடக்­கப் பள்ளி இறுதி ஆண்­டு (பிஎஸ்எல்இ) தேர்வு எழு­திய மாண­வர்­கள் புதிய மதிப்­பீட்டு முறை­யின்­கீழ் தேர்வு எழு­திய முதல் தொகுதி மாண­வர்­கள் ஆவார்­கள்.

கடந்த ஆண்டு டி மதிப்­பீட்டு முறை­யின்­கீழ் வழக்­க­நி­லைக்­குத் தகு­தி­பெற்ற தொடக்­க­நிலை 6 மாண­வர்­களில் 47 விழுக்­காட்­டி­னர் உயர்­நி­லைப் பள்­ளி­யில் உயர்­மட்­டப் பாடங்­களை எடுத்­துப் படிக்க முடிந்­தது. ஆனால் இவ்­வாண்டு அறி­மு­க­மான ஏஎல் (சாதனை நிலை) மதிப்­பீட்டு முறை­யின்­கீழ் வழக்­க­நிலை மாண­வர்­கள், உயர்­நிலை 1ல் சவால் மிகுந்த வழக்­க­நிலை (ஏட்­டுக்­கல்வி) அல்­லது விரை­வு­நிலை பாடங்­க­ளுக்­குத் தகுதி பெறு­வர்.

ஒவ்­வொரு பாடத்­தி­லும் அவர்­கள் பெற்­றி­ருக்­கும் மதிப்­பெண்­க­ளைப் பொறுத்து இந்­தத் தேர்ந்­தெ­டுப்பு அமை­யும்.

2016ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட புதிய மதிப்­பீட்டு முறை, தேர்வு முடி­வில் ஒரே மாதிரி மதிப்­பெண்­க­ளைப் பெறும் மாண­வர்­க­ளி­டையே உள்ள வேறு­பாட்­டைக் களைய உத­வு­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.

இதற்கு முன்பு மாண­வர்­க­ளுக்கு ஏஸ்­டார் முதல் இ வரை தர­நிலை வழங்­கப்­பட்­டது.

புதிய முறை­யின்­கீழ் ஒவ்­வொரு பாடத்­திற்­கும் 1 முதல் 8 வரை ஏஎல் மதிப்புப் புள்ளி வழங்­கப்­ப­டு­கிறது.

வழக்­க­நி­லைக்­குத் தகுதி பெறும் பிஎஸ்­எல்இ தேர்ச்சி மாண­வர்­கள் ஏஎல் மதிப்புப் புள்ளி 5 அல்­லது அதற்கு மேல் சிறப்­பா­கப் பெற்­றி­ருப்­பின் வழக்­க­நிலை அல்­லது விரை­வு­நி­லை­யில் குறிப்­பிட்ட சில பாடங்­களை எடுத்­துப் படிக்­க­லாம்.

2018ஆம் ஆண்டு பாட அடிப்­ப­டை­யி­லான மதிப்­பீட்டு முறையை எல்லா உயர்­நி­லைப் பள்­ளி­க­ளி­லும் கல்வி அமைச்சு அறி­மு­கம் செய்­தது.

வழக்­க­நிலை மற்­றும் வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரிவு பாடங்­கள் மாண­வர்­க­ளின் திறன்­க­ளுக்கு ஏற்ப வெவ்­வேறு விருப்­பப் பாடங்­களை எடுப்­ப­தில் அதிக நீக்­குப்­போக்­கைத் தந்­தன.

2024ஆம் ஆண்­டுக்­குள் எல்­லாப் பள்­ளிக்­கூ­டங்­க­ளி­லும் முழு அளவில் பாடங்களின் அடிப்­ப­டை­யி­லான மதிப்­பீட்டு முறை­யைக் கொண்டு வர அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

மாண­வர்­கள் தங்­க­ளது திறன்­கள் மற்­றும் கற்­றல் பலத்­தின் அடிப்­ப­டை­யில் பாடங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க இது உத­வும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!