தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக ஊழியரின் விரலைக் கடித்துத் துப்பிய ஆடவர்

2 mins read
aef33973-16d8-4d1e-841a-2b18c226d93d
-

லாரி­யில் சென்­ற­போது இரு கட்­டு­மான ஊழி­யர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட வாக்­கு­வா­தம், அவர்­களில் ஒரு­வர் தமது விரல் நுனியை இழக்­கக் கார­ண­மா­கிப்­போ­னது.

அந்­தக் கட்­டு­மான ஊழி­யர்­களில் ஒரு­வர், இன்­னொ­ரு­வ­ரின் இட­துகை சுண்­டு­வி­ரல் நுனி­யைக் கடித்­துத் துண்­டித்­து­விட்­டார்.

சக ஊழி­ய­ரான திரு முத்­துச்­செல்­வத்­தின் இட­துகை சுண்­டு­வி­ரல் நுனி­யைக் கடித்­துத் துண்­டித்த குற்­றத்தை லோகன் கோவிந்­த­ராஜ், 30, நேற்று நீதி­மன்­றத்­தில் ஒத்­துக்­கொண்­டார்.

அர­சாங்க, எதிர்த்­த­ரப்பு வழக்­கறி­ஞர்­க­ளுக்கு இடையே உடன்­பாடு எட்­டப்­ப­டா­ததை அடுத்து, இந்­தச் சம்­ப­வத்­தால் திரு முத்­துக்கு நிரந்­தர பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதா என்­பதை முடி­வு­செய்­வ­தற்கு வழக்கு விசா­ர­ணையை ஒத்­தி­வைத்­தார் மாவட்ட நீதி­பதி லினெட் யாப்.

இந்­திய நாட்­ட­வ­ரான லோகன், மூன்று கலன் மது அருந்­தி­ய­பின் கடந்த ஆண்டு டிசம்­பர் 20ஆம் தேதி மாலை 4 மணி­ய­ள­வில் சக ஊழி­யர் இரு­வ­ரு­டன் லாரி­யில் ஏறி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கிராஞ்சி கிர­சென்ட்­டில் உள்ள ஒரு தொழிற்­பேட்­டை­யில் இருக்­கும் தங்­க­ளது வெளி­நாட்டு ஊழியர் விடு­திக்கு அருகே அவர்­கள் இருந்­த­னர்.

அவ்வேளையில் போதை­யில் இருந்த லோகன், திரு முத்­தைத் திட்டி, மற்ற ஊழி­யர்­க­ளு­டன் அவர் உறங்­கு­வ­தா­கக் குற்­றஞ்­சாட்­டி­னார். அத­னைத் தொடர்ந்து, தம்­மீது குற்­றம் சுமத்­து­வதை நிறுத்­தி­விட்டு, லாரி­யில் இருந்து இறங்­கும்­படி லோக­னி­டம் சொன்­னார் திரு முத்து.

இரு­வ­ரும் லாரி­யை­விட்டு இறங்­கி­னர். அதன்­பின், தமது இட­து­கையை லோக­னின் நெஞ்­சில் வைத்­துத் தள்­ளி­னார் திரு முத்து. அப்­போது, தம் வாய்க்கு அருகே இருந்த திரு முத்­தி­னு­டைய சுண்டு விர­லின் நுனி­யைக் கடித்­துத் துப்­பி­னார் லோகன்.

அவர் வேண்­டு­மென்றே இவ்­வாறு செய்­த­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

அத­னால், திரு முத்­தின் விர­லில் இருந்து ரத்­தம் சொட்­டி­யது. தமது இட­துகை சுண்­டு­வி­ர­லின் நுனிப்­ப­கு­தி­யைக் காணா­ததை அவர் உணர்ந்­தார்.

உட­ன­டி­யாக, அவர் விடு­தி­வாசி­க­ளி­டம் உதவி கோரி­னார். அங்­கி­ருந்த துப்­பு­ர­வா­ளர் ஒரு­வர் அவ­சர மருத்­துவ வண்­டிக்கு அழைப்பு விடுத்­தார். அத­னைத் தொடர்ந்து, திரு முத்து கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அங்கு, தொற்று ஏற்­படா­மல் தடுப்­ப­தற்­காக அவ­ரது விரல் பகுதி வெட்­டி­யெ­டுக்­கப்­பட்டது.

சம்­பவ இடத்­தில் திரு முத்­தின் சுண்­டு­வி­ரல் நுனிப்­ப­குதி கண்­டு எ­டுக்­கப்­பட்­ட­தா­க­வும் ஆனா­லும் அதனை மீண்­டும் விர­லு­டன் ஒட்ட வைக்க இய­ல­வில்லை என்­றும் கூறப்­பட்­டது.

பின்­னர் லோகன் கைது செய்­யப்­பட்­டார். சம்­ப­வத்­தின்­போது அவர் போதை­யில் இருந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

லாரி­யில் திரு முத்­தைத் திட்­டி­ய­தைத் தன்­னால் நினை­வு­கூர இய­ல­வில்லை என்று நீதி­மன்­றத்­தில் லோகன் சொன்­னார். ஆயி­னும், அவர் அதனை மறுக்­க­வில்லை. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு வரு­கிறது. லோக­னின் பிணை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.