வேலையிட விபத்தில் 43 வயது இந்திய ஊழியர் உயிரிழந்தார்

வேலையிட விபத்தில் 43 வயது இந்திய ஊழியர் உயிரிழந்தார்

1 mins read
81ebab49-20ae-467f-abc7-cbefd27abb62
-

இம்­மா­தம் 18ஆம் தேதி பணி­யி­டத்­தில் ஏற்­பட்ட விபத்து ஒன்­றில் சிக்கி, இந்­திய ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

சாங்கி விமான நிலை­யத்­தின் 5ஆம் முனை­யத்­திற்­கான கட்­டு­மா­னப் பணி­களை உள்­ள­டக்­கும் சாங்கி ஈஸ்ட் திட்­டத்­திற்­கான பணி­யி­டத்­தில் அவர் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது இந்த விபத்து நிகழ்ந்­தது.

தானா மேரா கோஸ்ட் சாலை­யில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது. இது­கு­றித்து அன்­றி­ரவு 8.05 மணி­ய­ள­வில் காவல்­து­றைக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

அந்த 43 வயது ஊழி­யர் இயக்­கிக்­கொண்­டி­ருந்த 'அதிர்வு உருளை' எனும் மண்­ணைக் கெட்­டிக்­கும் இயந்­தி­ரம் கவிழ்ந்­ததை அடுத்து, அவர் அதில் சிக்­கிக்­கொண்­டார்.

'ஐஎன்ஏ ஹெவி மெஷி­னரி அண்ட் எக்­விப்­மென்ட்' எனும் நிறு­வ­னத்­தில் அந்த ஊழி­யர் பணி­யாற்றி வந்­தார். அவர் சிக்­கிக்­கொண்ட இயந்­தி­ரத்­தின் எடை ஏறக்­கு­றைய 10 டன் எனக் கூறப்­படு­கிறது.

சக ஊழி­யர்­கள் பலர் சேர்ந்து, அவரை இயந்­தி­ரத்­தில் இருந்து மீட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­போது அவர் சுய­நி­னை­வு­டன் இல்லை. காயங்­கள் கார­ண­மாக அவர் அங்கு உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து மனி­த­வள அமைச்­சும் காவல்­து­றை­யும் விசா­ரணை நடத்தி வரு­கின்­றன.

அந்த ஊழி­ய­ரின் மர­ணத்­தில் சூது எது­வும் இருப்­ப­தா­கச் சந்­தே­கப்­ப­ட­வில்லை.

உயி­ரி­ழந்த அந்த ஊழி­ய­ரின் குடும்­பத்­துக்கு உதவி வழங்­கப்­பட்டு வரு­கிறது.

இத­னி­டையே, விபத்து நிகழ்ந்த பணி­யி­டத்­தில் மண்­ணைக் கெட்­டிப்­பது தொடர்­பான எல்­லாப் பணி­களை­யும் நிறுத்திவைக்க அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.