சட்டவிரோதமாக சாக்கடையில் கழிவுநீரைத் திறந்துவிட்ட நிறுவனத்திற்கு $17,000 அபராதம்

1 mins read
1df25be9-df1b-4737-bd04-b2d801a6b4ff
-

பொதுக் கழி­வு­நீர்க் கால்­வா­யில் சட்­ட­வி­ரோ­த­மா­கத் திர­வக் கழி­வு­களைத் திறந்­து­விட்ட ஒரு கழிவு மேலாண்மை நிறு­வ­னத்­திற்­குக் கடந்த 2018ஆம் ஆண்­டில் $12,200 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அதே­போன்ற குற்­றத்­திற்­காக, 'என்­எஸ்­எல் ஆயில்­கெம் லாஜிஸ்­டிக்ஸ்' என்ற அந்­நி­று­வ­னத்­திற்கு இப்­போது மீண்­டும் $17,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் 24ஆம் தேதி­யும் அக்­டோ­பர் 26ஆம் தேதி­யும் திர­வக் கழி­வு­க­ளைப் பொதுக் கழி­வு­நீர்க் கால்­வா­யில் திறந்­து­விட்­டது தொடர்­பில் அந்­நி­று­வ­னத்­தின் மீதான மூன்று குற்­றச்­சாட்­டு­கள் மெய்ப்­பிக்­கப்­பட்­டன.

2020 செப்­டம்­பர் 24ஆம் தேதி பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் வழக்­க­மான சோத­னையை மேற்­கொண்­டது. அப்­போது, அனு­ம­திக்­கப்­பட்ட அள­விற்­கும் மேலாக கன உலோ­கங்­கள் அடங்­கிய கழி­வு­நீரை அந்­நி­று­வ­னம் பொதுக் கழி­வு­நீர்க் கால்­வாய்­களில் திறந்­து­விட்­டது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதன்­பின், அக்­டோ­பர் 26ஆம் தேதி பின்­னி­ர­வில் கழ­கம் மேற்­கொண்ட திடீர் ஆய்­வின்­போது, அந்­நி­று­வன ஊழி­யர்­கள் திர­வக் கழி­வு­க­ளைப் பொதுக் கழி­வு­நீர்க் கால்­வா­யில் திறந்­து­விட்­ட­தைக் கண்­டு­பி­டித்­தது.

"இம்­முறை, தங்­க­ளது தவ­று­களைப் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் கண்­டு­பி­டிக்­கா­மல் இருப்­ப­தற்­காக, 'என்­எஸ்­எல் ஆயில்­கெம்' நிறு­வனம் கண்­கா­ணிப்­புக் கரு­வி­யை­யும் ஆய்வுக்­க­ல­னில் இருந்த மாதி­ரி­யெ­டுப்­புக் குழாய்­க­ளை­யும் சேதப்­படுத்தி இருந்­தது," என்று கழ­கம் விளக்­கி­யது.

அத­னைத் தொடர்ந்து, அன்­றைய நாளே கழி­வு­நீ­ரைப் பொதுக் கழி­வு­நீர்க் கால்­வா­யில் திறந்­து­விட அந்­நி­று­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்ட அனு­மதி மீட்டுக்கொள்ளப்பட்டது.